search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    151-வது பிறந்தநாளை முன்னிட்டு வ.உ.சிதம்பரனார் சிலைக்கு, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மரியாதை
    X
    வ.உ.சிதம்பரனார் சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபோது எடுத்தபடம். அருகில் கலெக்டர் செந்தில்ராஜ் உள்ளார்.

    151-வது பிறந்தநாளை முன்னிட்டு வ.உ.சிதம்பரனார் சிலைக்கு, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மரியாதை

    • சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
    • வ.உ.சிதம்பரனார் சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    ஓட்டப்பிடாரம்:

    சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் நினைவு இல்லத்தில் உள்ள அவரது முழுஉருவ வெண்கல சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அரசு சார்பில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் 41 பயனாளிகளுக்கு ரூ. 5.30 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் சண்முகையா, மார்க்கண்டேயன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், கோவில்பட்டி சப்-கலெக்டர் மகாலெட்சுமி, ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ், யூனியன் ஆணையாளர்கள் வெங்கடாச்சலம், பாண்டியராஜன் தாசில்தார் நிஷாந்தினி, சமூக பாதுகாப்பு திட்டதாசில்தார் செல்வக்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×