என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
151-வது பிறந்தநாளை முன்னிட்டு வ.உ.சிதம்பரனார் சிலைக்கு, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மரியாதை
- சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
- வ.உ.சிதம்பரனார் சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஓட்டப்பிடாரம்:
சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் நினைவு இல்லத்தில் உள்ள அவரது முழுஉருவ வெண்கல சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அரசு சார்பில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் 41 பயனாளிகளுக்கு ரூ. 5.30 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் சண்முகையா, மார்க்கண்டேயன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், கோவில்பட்டி சப்-கலெக்டர் மகாலெட்சுமி, ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ், யூனியன் ஆணையாளர்கள் வெங்கடாச்சலம், பாண்டியராஜன் தாசில்தார் நிஷாந்தினி, சமூக பாதுகாப்பு திட்டதாசில்தார் செல்வக்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்