search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கடன் வாங்கி ஊழல்,  சாதி அரசியல் பேசி வென்ற போலி கபடதாரிகள்  - தி.மு.க.-வை  விமர்சித்த ஆதவ் அர்ஜுனா
    X

    கடன் வாங்கி ஊழல், சாதி அரசியல் பேசி வென்ற போலி கபடதாரிகள் - தி.மு.க.-வை விமர்சித்த ஆதவ் அர்ஜுனா

    • 100 வருடங்கள் ஆகியும் பெரியார் கண்ட கனவு எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
    • ரூ.1000 கொடுத்து ரூ.10ஆயிரத்தை பிடுங்கி கொண்டிருக்கிறார்கள்.

    சென்னை:

    தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது:-

    * பிறப்பால் ஒரு தலைவர் உருவாகக்கூடாது, மன்னராட்சி ஒழிக்கப்படவேண்டும் என்கிற ஒரு உண்மையை கூறியதற்காக பல்வேறு சூழ்ச்சிகள் என்னை சூழ்ந்த போது என்னை அழைத்தவர் விஜய்.

    * சினிமாவின் உச்சத்தில் இருந்த போது அதனை துறந்து அரசியலுக்கு வந்தவர் விஜய்.

    * சாதி அரசியலை பேசி தேர்தல் அரசியலில் வெற்றி பெற்று ஊழலை முதற்கண்ணாக கொண்டுள்ளனர்.

    * பெரியாரை முன்னிலைப்படுத்தி இன்றைய அரசியல் ஊழல்வாதிகளின் கையில் உள்ளது.

    * 100 வருடங்கள் ஆகியும் பெரியார் கண்ட கனவு எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

    * 75 வருடங்களாக கொள்கை பேசிய தலைவர்கள் என்ன மாற்றம் செய்தார்கள்?

    * தமிழகத்தின் கடன் 9 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

    * ஊழல்வாதிகளின் கைகளில் தமிழக அரசியல் இருப்பதை துடைத்தெறிய வேண்டும்.

    * 15 வருடங்களாக 5 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ள கட்சி அதிமுக.

    * வெளிநாட்டில் பொருளாதாரத்தை உருவாக்கி கடன் வாங்குவர், தமிழகத்தின் கடனை உருவாக்கி ஊழல் செய்கின்றனர்.

    * சாதி அரசியல் பேசி தேர்தலில் வென்ற போலி கபடதாரிகள்.

    * தமிழக அரசியலுக்கு ஒரே மாற்று த.வெ.க., ஒரே மாற்று தலைவர் விஜய்.

    * தளபதி என்ற நிலையில் இருந்து தலைவர் என்று பரிமாணத்தை நோக்கி நகர்ந்து வருகிறார் விஜய்.

    * ஆளுங்கட்சிக்கு தூக்கத்திலும் இந்த கூட்டத்தை எப்படி அடக்குவது? என்பது பற்றிய எண்ணம் தான் உள்ளது.

    * சினிமா துறையில் பல தொழில்களை நடத்தி கொண்டிருக்கும் அரசாக இன்றைய அரசியல் உள்ளது.

    * சிறை செல்வதற்கும் த.வெ.க.வினர் தயாராக உள்ளனர்.

    * ரூ.1000 கொடுத்து ரூ.10ஆயிரத்தை பிடுங்கி கொண்டிருக்கிறார்கள்.

    * எங்களிடம் பணம் இல்லாமல் இருக்கலாம், நல்ல தலைவர்கள்கள் இருக்கிறார்கள்.

    * விஜயை பார்த்து நடிகர் என்று கூறுகின்றனர், ஆனால் என் தலைவரை பார்த்து நீங்கள் தான் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

    * நம் கொள்கைகளை உள்வாக்கி மேலும் பல தலைவர்கள் வர தயாராக உள்ளனர். பல பூகம்பங்கள் தயாராக உள்ளது என்றார்.

    Next Story
    ×