என் மலர்
தமிழ்நாடு

இந்த மாதிரி செய்யாதீங்க.. ஆதவ் அர்ஜூனா மனைவி அறிக்கை

- பா.ஜ.க. கட்சியை கடுமையாக விமர்சித்து பேசினார்.
- அரசியல் முடிவுகள் சுயமாக எடுக்கப்படுகின்றன.
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்திருக்கிறார். த.வெ.க. கட்சியில் ஆதவ் அர்ஜூனாவுக்கு தேர்தல் பிரச்சார மேலாண்மை பொது செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் த.வெ.க. இரண்டாம் ஆண்டு தொடக்க விழா ஆதவ் அர்ஜுனா மேற்பார்வையில் நடைபெற்றது. இவ்விழாவில் உரையாற்றிய ஆதவ் அர்ஜூனா, தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கட்சிகளை கடுமையாக விமர்சித்து பேசினார்.
இந்த நிலையில் தன் கணவரின் அரசியல் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை தனித்தனியாக வைத்திருக்க முடிவு செய்துள்ளதாக ஆதவ் அர்ஜூனாவின் மனைவி டெய்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நானும் ஆதவ் அர்ஜுனாவும் எப்போதும் எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையையும் தொழில் வாழ்க்கையையும் தனித்தனியாக வைத்திருக்க விரும்புகிறோம். தொழில் சார்ந்த முடிவுகளும், அரசியல் முடிவுகளும் சுயமாகவே எடுக்கப்படுகின்றன."
"இதற்கு எங்கள் குடும்பத்துடன் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் இருவரும் தனித்துவமான கருத்துக்களைக் கொண்டுள்ளோம். ஒருவருக்கொருவர் நாங்கள் கொண்டுள்ள தனியுரிமையையும், கருத்துக்களையும் மதிக்கிறோம்."
"தவறான கருத்துக்களை பரப்புவதை தவிர்க்க வேண்டும். எங்கள் குடும்பத்தை தொழில் மற்றும் பொது வாழ்க்கையில் சிக்க வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்." என தெரிவித்துள்ளார்.