என் மலர்
தமிழ்நாடு
X
அதானி விவகாரம்- அமைச்சரின் வெற்று மிரட்டலுக்கு பாமக அஞ்சாது: வழக்கறிஞர் பாலு
Byமாலை மலர்7 Dec 2024 11:03 AM IST
- அதானி குழுமம் தமிழக மின் வாரியத்துக்கு கையூட்டு கொடுத்தது என்ற குற்றச்சாட்டுக்கு பதில் என்ன?
- முதல்வர்-அதானி சந்திப்பு நடக்கவில்லை என்றால் அதுகுறித்து செய்தி வெளியிட்ட ஊடகங்கள் மீது வழக்கு தொடுக்க அரசு தயாரா?
பாமக செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
* மின்சாரத்துறை அமைச்சரின் வெற்று மிரட்டல்களுக்கு பாமக அஞ்சாது.
* அதானி குழுமம் தமிழக மின் வாரியத்துக்கு கையூட்டு கொடுத்தது என்ற குற்றச்சாட்டுக்கு பதில் என்ன?
* அதானி ஊழல் குற்றச்சாட்டுக்கு பதில் கூறாத அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கமாக பாடும் பல்லவியை மீண்டும் பாடி உள்ளார்.
* செந்தில் பாலாஜி மது வணிக துறையை கூடுதலாக கவனித்து வருவதால் பாமக-வின் வினா புரியாமல் இருந்திருக்கலாம்.
* மீண்டும் ஒருமுறை வினாவை முன்வைக்கிறேன். அதை நன்றாக படித்து விட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளிக்க வேண்டும்.
* முதல்வர்-அதானி சந்திப்பு நடக்கவில்லை என்றால் அதுகுறித்து செய்தி வெளியிட்ட ஊடகங்கள் மீது வழக்கு தொடுக்க அரசு தயாரா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
Next Story
×
X