என் மலர்
தமிழ்நாடு

வேளாண் பட்ஜெட்: 1000 இடங்களில் முதலமைச்சர் உழவர் நல சேவை மையம் அமைக்கப்படும்

- கடந்த நிதியாண்டில் விவசாயிகளுக்கு 1.81 லட்சம் பம்பு செட்டுகள் அமைத்து தரப்பட்டுள்ளன.
- டெல்டா மாவட்டங்களில் நீர்ப்பாசன பகுதிகளை தூர்வாரியதால் பாசன பகுதி 96 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது.
2025-26-ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை சட்டசபையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் கூறி இருப்பதாவது:
* 3 ஆண்டுகளில் ரூ.61 கோடி 12 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு ஆதி திராவிட பழங்குடியின விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்.
* கடந்த நிதியாண்டில் விவசாயிகளுக்கு 1.81 லட்சம் பம்பு செட்டுகள் அமைத்து தரப்பட்டுள்ளன.
* 1.86 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
* கடந்த 4 ஆண்டுகளில் ரூ.1631 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
* தமிழ்நாட்டில் 46,000 ஏக்கர் தரிசு நிலங்கள் தி.மு.க. அரசின் திட்டங்களால் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
* ஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு 1000-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் அமைத்து தரப்பட்டுள்ளன.
* தோட்டக்கலை பயிர் சேதத்திற்கான நிவாரணம் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
* கரும்பு விவசாயிகளுக்கு மெட்ரின் டன்னுக்கு ரூ.215 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
* 108 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
* வேளாண் பட்டதாரிகளைக் கொண்டு உழவர் நல சேவை மையங்கள் செயல்படும்.
* விவசாயிகளுக்கு உதவும் வகையில் 1000 இடங்களில் முதலமைச்சர் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும்.
* முதலமைச்சரின் மண்ணுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 21 லட்சம் உழவர்கள் பயன்பெற்றுள்ளனர்.
* டெல்டா மாவட்டங்களில் நீர்ப்பாசன பகுதிகளை தூர்வாரியதால் பாசன பகுதி 96 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது.
* 30 லட்சம் உழவர்களுக்கு பயிர் காப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.