search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வேளாண் பட்ஜெட்: 100 முன்னோடி விவசாயிகள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்...

    • நேற்று 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
    • 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது.

    தமிழக சட்டசபையில் நேற்று 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

    அதனைத்தொடர்ந்து, 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது. 21-ந்தேதி சட்ட மசோதாக்கள் தாக்கல், நிறைவேற்றம் நடக்க உள்ளது.

    Live Updates

    • 15 March 2025 9:59 AM IST

      தரமான விதைகள் வழங்க ரூ. 52 கோடி நிதி ஒதுக்கீடு. 3 லட்சம் ஏக்கரில் கோடை உழவு செய்ய ரூ. 24 கோடி மானியம் வழங்கப்படும்.

    • 15 March 2025 9:59 AM IST

      டெல்டா அல்லாத மாவட்டங்களில் பயிர் சாகுபடி அதிகரிக்க சிறப்பு தொகுப்பு திட்டத்திற்கு ரூ. 102 கோடி ஒதுக்கீடு. 

    • 15 March 2025 9:58 AM IST

      63 ஆயிரம் மலைவாழ் உழவர்கள் பயனடையும் வகையில் ரூ. 22.80 லட்சம் மானியம் வழங்கிடப்படும். இத்திட்டத்துக்கு ரூ. 22 கோடி ஒதுக்கீடு- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

    • 15 March 2025 9:57 AM IST

      டெல்டா மாவட்டங்களில் நீர்ப்பாசன பகுதிகளை தூர்வாரியதால் பாசன பகுதி 96 லட்சம் ஏக்கராக உயர்வு

    • 15 March 2025 9:56 AM IST

      30 லட்சம் உழவர்களுக்கு பயிர் காப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

    • 15 March 2025 9:56 AM IST

      டெல்டா மாவட்டங்களில் நீர்ப்பாசன பகுதிகளை தூர்வாரியதால் பாசன பகுதி 96 லட்சம் ஏக்கராக உயர்வு- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

    • 15 March 2025 9:55 AM IST

      முதலமைச்சரின் மண்ணுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 21 லட்சம் உழவர்கள் பயன்பெற்றுள்ளனர். 

    • 15 March 2025 9:54 AM IST

      விவசாயிகளுக்கு உதவும் வகையில் 1000 முதலமைச்சர் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும். 

    • 15 March 2025 9:54 AM IST

      வேளாண் பட்டதாரிகளைக் கொண்டு உழவர் நல சேவை மையங்கள் செயல்படும். 

    • 15 March 2025 9:54 AM IST

      108 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

    Next Story
    ×