என் மலர்
தமிழ்நாடு
வேளாண் பட்ஜெட்: 100 முன்னோடி விவசாயிகள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்...

- நேற்று 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
- 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது.
தமிழக சட்டசபையில் நேற்று 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
அதனைத்தொடர்ந்து, 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது. 21-ந்தேதி சட்ட மசோதாக்கள் தாக்கல், நிறைவேற்றம் நடக்க உள்ளது.
Live Updates
- 15 March 2025 9:35 AM IST
உழவர்கள் பாதுகாக்கப்பட்டால் அவர்கள் மக்களை பாதுகாப்பார்கள்- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
- 15 March 2025 9:33 AM IST
2025-26ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
- 15 March 2025 9:23 AM IST
சட்டசபையில் என்னென்ன விவகாரங்களை எழுப்பலாம் என்பது தொடர்பாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
- 15 March 2025 9:17 AM IST
வேளாண் பட்ஜெட்டில் கூட்டுறவு வங்கிகளில் அளிக்கப்படும் விவசாய கடனின் அளவு அதிகரிக்குமா என எதிர்பார்ப்பு
- 15 March 2025 9:17 AM IST
வேளாண் பட்ஜெட்டில் கரும்பு, நெல் போன்றவற்றிற்கான கொள்முதல் விலை அதிகரிக்குமா என விவசாயிகள் எதிர்பார்ப்பு
- 15 March 2025 9:15 AM IST
தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், கலைஞரின் கோபாலபுரம் இல்லம், மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.