என் மலர்
தமிழ்நாடு

வேளாண் பட்ஜெட்: வெங்காய சேமிப்பு கூடங்கள் அமைக்க ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு

- நறுமண ரோஜா சாகுபடியை ஊக்குவிக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு.
- சீமை கருவேலங்களை அகற்றி மிளகாய் சாகுபடிக்கு ரூ.11 கோடி ஒதுக்கீடு.
2025-26-ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை சட்டசபையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் கூறி இருப்பதாவது:
* ஊட்டச்சத்து வேளாண் இயக்கத்திற்கு ரூ.297 கோடி ஒதுக்கீடு.
* தென்னை உற்பத்தியை அதிகரிக்க வேளாண் பட்ஜெட்டில் ரூ.8.95 கோடி ஒதுக்கீடு.
* காய்கறிகள் விதை தொகுப்பு 15 லட்சம் குடும்பங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும்.
* பழச்செடி தொகுப்பு 9 லட்சம் குடும்பங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும்.
* பயிர் வகை விதை தொகுப்பு 1 லட்சம் இல்லங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும்.
* மலர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்க ரூ.8.59 கோடி நிதி ஒதுக்கீடு.
* உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் 3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும்.
* வெங்காய சேமிப்பு கூடங்கள் அமைக்க மானியம் வழங்க ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு.
* நறுமண ரோஜா சாகுபடியை ஊக்குவிக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு.
* மல்லிகை உற்பத்தியை அதிகரிக்க ரூ.1.6 கோடி செலவில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
* சீமை கருவேலங்களை அகற்றி மிளகாய் சாகுபடிக்கு ரூ.11 கோடி ஒதுக்கீடு.
* முந்திரி சாகுபடியை அதிகரிக்க ரூ.10 கோடியில் முந்திரி வாரியம் அமைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.