search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுக-வில் இணைந்த அமமுக நிர்வாகிகள்
    X

    எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுக-வில் இணைந்த அமமுக நிர்வாகிகள்

    • அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மின்சாரப் பிரிவு தொழிற்சங்க மாநில துணைத் தலைவர் பழவை P. பன்னீர்செல்வம்
    • வட சென்னை கிழக்கு மாவட்ட மன்ற துணைச் செயலாளர் D. முரளி, 10-வது வட்டச் செயலாளர் C.M. முனிபாபு

    அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மின்சாரப் பிரிவு தொழிற்சங்க மாநில துணைத் தலைவர் பழவை P. பன்னீர்செல்வம், வட சென்னை கிழக்கு மாவட்ட மன்ற துணைச் செயலாளர் D. முரளி, 10-வது வட்டச் செயலாளர் C.M. முனிபாபு, 2-வது வட்டச் செயலாளர் காதர் அலி, இணைச் செயலாளர் சாந்தி பெரியசாமி,

    மேலமைப்புப் பிரதிநிதி I. காதர் பாஷா, துணைச் செயலாளர் D. ரகு, 1-வது வட்ட துணைச் செயலாளர் P. பாபு, L. பொற்கேஷ்வரன், N. தயாளன், D. குமார், R. தேசப்பன், R. சரவணன், M. தேசப்பன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் நேரில் சந்தித்து, தங்களைக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

    இந்நிகழ்வின்போது, திருவள்ளூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மாதவரம் V. மூர்த்தி, திருவொற்றியூர் மேற்கு பகுதிக் கழகச் செயலாளர் K. குப்பன், Ex. MLA., உள்ளிட்ட கழக நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

    Next Story
    ×