search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வீட்டுக்காவலில் பா.ஜ.க. பிரமுகர்கள்.. தொடை நடுங்கி தி.மு.க. அரசு - அண்ணாமலை விளாசல்
    X

    வீட்டுக்காவலில் பா.ஜ.க. பிரமுகர்கள்.. "தொடை நடுங்கி தி.மு.க. அரசு" - அண்ணாமலை விளாசல்

    • பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடுமையாக கண்டித்துள்ளார்.
    • போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறது.

    தி.மு.க. அரசின் டாஸ்மாக் ஊழலை கண்டித்து பா.ஜ.க. சார்பில் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இன்றைய போராட்டம் தொடங்குவதற்கு முன்பே தமிழ்நாடு பா.ஜ.க.-வை சேர்ந்த மூத்த தலைவர்களின் இல்லங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    மேலும், பா.ஜ.க. தலைவர்களை போராட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்க மறுத்து போலீசார் அவர்களை வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். சென்னையில், பா.ஜ.க. தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்ட சம்பவத்தை தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடுமையாக கண்டித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "திமுக அரசின் ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, தமிழ்நாடு பா.ஜ.க. சார்பில், இன்று (மார்ச் 17) சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அறிவித்திருந்தோம். தொடைநடுங்கி திமுக அரசு, பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ஆளுநருமான, அக்கா திருமதி தமிழிசை சவுந்தரராஜன், மாநிலச் செயலாளர் சகோதரர் திரு வினோஜ் பி செல்வம் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என, வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறது.

    பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பசைபோட்டு ஒட்டியது போல இருக்கும் ஆட்களைக் கொண்டு, கீழ்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகளை உங்கள் ஏவலுக்குப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள்.

    ஜனநாயக ரீதியாகப் போராட்டம் அறிவித்து, முற்றுகை தேதியை முன்னரே அறிவித்ததால்தானே, உங்களால் இதுபோன்ற கோழைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட முடிகிறது?

    தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஓருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்?," என்று குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×