search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்ட 15 பேர் மீது வழக்குப்பதிவு- மதுரை போலீசார் நடவடிக்கை
    X

    முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்ட 15 பேர் மீது வழக்குப்பதிவு- மதுரை போலீசார் நடவடிக்கை

    • வணிக நிறுவனங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அ.தி.மு.க.வினர் இந்த துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து வருகிறார்கள்.
    • நேற்று மாலை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் செல்லூர் ராஜூ தலைமையில் அ.தி.மு.க. வினர் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

    மதுரை:

    மதுரை மாநகர மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் ஒவ்வொரு பகுதிகளிலும் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி திண்ணைப் பிரசாரம் என்ற பெயரில் நடந்து வருகிறது. மதுரை மாநகர் பகுதியில் பேரவை மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ். எஸ். சரவணன் தலைமையில் இந்த துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்று பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி வருகிறார்.

    வணிக நிறுவனங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அ.தி.மு.க.வினர் இந்த துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து வருகிறார்கள். நேற்று மாலை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் செல்லூர் ராஜூ தலைமையில் அ.தி.மு.க. வினர் துண்டு பிரசுரங்களை வழங்கினர். அப்போது பொதுமக்களும் ஆர்வமாக இந்த துண்டு பிரசுரங்களை பெற்றனர். கடைகள், மார்க்கெட் பகுதியில் இந்த துண்டு பிரசுரங்களை அ.தி.மு.க.வினர் பொது மக்களுக்கு வினியோகம் செய்த போது பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    இதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மாவட்ட செயலாளர் எஸ்.எஸ். சரவணன், கவுன்சிலர் ரவி உள்ளிட்ட 15 பேர் மீது ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அ.தி.மு.க. துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சியில் போலீசார் வழக்குப்பதிவு செய்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×