search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குமரி அருகே தண்டவாளத்தில் கற்களை வைத்து ரெயிலை கவிழ்க்க சதி
    X

    குமரி அருகே தண்டவாளத்தில் கற்களை வைத்து ரெயிலை கவிழ்க்க சதி

    • அரைமணி நேரம் ரெயில் தாமதமாக புறப்பட்டது.
    • ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே தண்டவாளத்தில் கற்களை வைத்து ரெயிலை கவிழ்க்க தீட்டப்பட்ட சதி முறியடிக்கப்பட்டுள்ளது.

    மங்களூர் செல்லும் பரசுராமன் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை குமரியில் இருந்து புறப்பட்டது. இரணியல் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை பார்த்த லோகோ பைலட் ரெயிலை நிறுத்தினார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    இதன்பின் தண்டவாளத்தில் இருந்த கற்களை அகற்றிய பின்னர் அரைமணி நேரம் ரெயில் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    இதையடுத்து தண்டவாளத்தில் கற்களை வைத்தது யார்? என்பது குறித்து ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×