search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அண்ணா பல்கலை வன்கொடுமை வழக்கில் யார் அந்த சார்? என்பதை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும்- தே.மு.தி.க. கூட்டத்தில் தீர்மானம்
    X

    அண்ணா பல்கலை வன்கொடுமை வழக்கில் யார் அந்த சார்? என்பதை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும்- தே.மு.தி.க. கூட்டத்தில் தீர்மானம்

    • மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய பெருமக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
    • தமிழ்நாடு முழுவதும் குண்டும், குழியுமாக இருக்கின்ற சாலைகளை சரி செய்து தர வேண்டும்.

    சென்னை:

    தே.மு.தி.க. மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    * முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், புதுக்கோட்டை சமூக ஆர்வலர் ஜெகபர் அலி, தே.மு.தி.க. நாமக்கல் தெற்கு முன்னாள் மாவட்ட கழக செயலாளர் ஆர்.கே.ராமலிங்கம் ஆகியோரது மறைவுக்கு இரங்கலை தெரிவித்து, இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்படுகிறது.

    * தே.மு.தி.க. கொடி நாள் வருகிற 12-ந்தேதி 25-ம் ஆண்டு "வெள்ளி விழாவை" முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிராமந்தோறும் உள்ள அனைத்து கிளை கழகங்களிலும் கொடி ஏற்றி இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும்.

    * அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஞானசேகரனை வன்மையாக கண்டிப்பதோடு, காவல்துறை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தாலும், அந்த "சார்" யார் என்று இன்னும் கண்டு பிடித்து தெரியப்படுத்தவில்லை. எனவே தமிழக அரசு உடனடியாக ஞானசேகரனுக்கு உதவிய "சாரை" கைது செய்ய வேண்டும்.

    * தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு படிப்படியாக டாஸ்மாக்கை குறைப்போம் என்று அறிவித்த போதிலும், நாள் தோறும் விற்பனை அதிகரித்துகொண்டே தான் போகிறது. இதனால் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சாலை விபத்து போன்ற சம்பவங்கள் நடந்தேறிவருவது தொடர்கதையாக இருக்கிறது. தமிழக அரசு உடனடியாக மது மற்றும் போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும்.

    * மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு, மீனவர்கள் பிரச்சனையில் நிரந்தர தீர்வு காண "கச்சத்தீவை மீட்டு" எடுக்க வேண்டும்.

    * தென்காசி, புதுக்கோட்டை, திருச்சி, வேலூரில் நடைபெற்று வரும் கனிம வளக் கொள்ளை மற்றும் மணல் கொள்ளை போன்ற கனிம வளங்களை பக்கத்து மாநிலங்களான கேரளா மற்றும் ஆந்திராவிற்கு கடத்தி கொண்டிருக்கின்றனர்.

    இதுபோதாது என்று தி.மு.க. அரசு மீண்டும் 13 மாவட்டத்தில் மணல் குவாரிகளை திறக்க தேர்வு செய்திருப்பதை கண்டிக்கிறேன்.

    * மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய பெருமக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

    * மறைந்த தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் கேப்டனுக்கு இலங்கையில் வாழும் தமிழர்கள் ஒன்று கூடி கேப்டன் உருவப்படம் நிறுவிய "தேர்" ஒன்றை தயாரித்துள்ளார்கள். தேரை ஒருமாதத்திற்கு பிறகு கேப்டன் ஆலயத்தில் நேரடியாக ஒப்படைக்க உள்ளார்கள்.

    கேப்டன் மீது பற்று வைத்து, தேரை தயாரித்த இலங்கையில் வாழும் தமிழ் பெருமக்களுக்கு, கழக பொதுச்செயலாளர் பிரேமலதா சார்பாகவும், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பாகவும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    * புதுக்கோட்டை வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த பிரச்சனையில், அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களே அந்த செயலை செய்ததாக மூன்று பேரை கைது செய்திருப்பது வேடிக்கையாக உள்ளது.

    இந்த சம்பவத்தை காவல்துறை திசை திருப்ப முயற்சி செய்கிறது என்று மக்கள் சந்தேகப்படுகிறார்கள். எனவே உண்மைக் குற்றவாளியை கண்டுபிடிக்க சி.பி.ஐ. விசாரணை வேண்டும்.

    * தமிழ்நாடு முழுவதும் குண்டும், குழியுமாக இருக்கின்ற சாலைகளை சரி செய்து தர வேண்டும்.

    இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    Next Story
    ×