search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இ-பைக் தீப்பிடித்து விபத்து: குழந்தை உயிரிழப்பு
    X

    இ-பைக் தீப்பிடித்து விபத்து: குழந்தை உயிரிழப்பு

    • வீட்டு வாசலில் சார்ஜ் போடப்பட்ட மின்சார இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
    • கணவன், மனைவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சென்னை மதுரவாயல் பாக்கியலட்சுமி நகரில் வீட்டு வாசலில் சார்ஜ் போடப்பட்ட மின்சார இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

    இந்த தீ விபத்தில் இருந்து தம்பதி குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேற முயன்றபோது 3 பேருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.

    தீக்காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 9 மாத கைக்குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

    கணவன் கௌதம், மனைவி மஞ்சு இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த தீ விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×