என் மலர்
தமிழ்நாடு

X
சென்னையில் நில அதிர்வு? பீதியில் மக்கள்- அதிகாரிகள் ஆய்வு
By
மாலை மலர்28 Feb 2025 4:14 PM IST (Updated: 28 Feb 2025 4:20 PM IST)

- கட்டிடம் லேசாக அதிர்ந்ததாக, ஊழியர்கள் அச்சத்துடன் தெரிவித்தனர்.
- நில அதிர்வு நிகழ்வு காரணமாக அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை அண்ணா சாலையில் கட்டிடம் அதிர்ந்ததாக கூறி வெளியேறிய தனியார் நிறுவன பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அண்ணா சாலையில் 5 மாடி கட்டிடத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பணியாளர்கள் வெளியேறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கட்டிடம் லேசாக அதிர்ந்ததாக, ஊழியர்கள் அச்சத்துடன் தெரிவித்தனர்.
பணியாளர்கள் உணர்ந்ததுபோல் இது உண்மையாகவே நில அதிர்வா? அல்லது வதந்தியா என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இருப்பினும், ரிக்டரில் பதிவாகாத அளவுக்கு சென்னையில் அதிர்வு வருவது வழக்கம் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், நில அதிர்வு நிகழ்வு காரணமாக அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Next Story
×
X