search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கீழ்ப்பாக்கத்தில் தொழில் அதிபர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
    X

    கீழ்ப்பாக்கத்தில் தொழில் அதிபர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

    • பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 3-வது தளத்தில் வசித்து வருபவர் அப்துல் காதர்.
    • அப்துல்காதர் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டாரா என்பது அதிகாரிகள் சோதனையில் தெரியவரும்.

    சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 3-வது தளத்தில் வசித்து வருபவர் அப்துல் காதர். தொழில் அதிபரான இவர் சென்னை மண்ணடி பகுதியில் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது வீட்டில் இன்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். இதற்காக 5 அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஒரு காரில் இன்று காலை 7 மணியளவில் அவரது வீட்டுக்கு வந்தனர். அவர்களுடன் மத்திய பாதுகாப்பு படையினரும் வந்தனர்.

    அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேரும் அப்துல் காதர் வீட்டில் சோதனை நடத்தி வருகிறார்கள். வழக்கமாக சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டால்தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவது வழக்கம். எனவே அப்துல்காதர் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டாரா என்பது அதிகாரிகள் சோதனையில் தெரியவரும்.

    Next Story
    ×