என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![ரெயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை: பாதுகாப்பில் கடுகளவு கூட கவனம் செலுத்தாததன் நீட்சி- இபிஎஸ் கண்டனம் ரெயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை: பாதுகாப்பில் கடுகளவு கூட கவனம் செலுத்தாததன் நீட்சி- இபிஎஸ் கண்டனம்](https://media.maalaimalar.com/h-upload/2025/02/07/9030812-eps1.webp)
ரெயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை: பாதுகாப்பில் கடுகளவு கூட கவனம் செலுத்தாததன் நீட்சி- இபிஎஸ் கண்டனம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக சாலையில் நடந்து செல்ல முடியவில்லை.
- கர்ப்பிணி பெண் என்று கூட பாராமல் பாலியல் தொல்லை அளித்துள்ள, வக்கிர புத்தியுடைய கயவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
கோவை-திருப்பதி இடையே சென்றுக்கொண்டிருந்த ரெயிலில், கர்ப்பிணி பெண்ணுக்கு இருவர் பாலியல் தொல்லை அளித்ததோடு, அந்த பெண் கூச்சலிட முயற்சி செய்ததால் ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதாக வரும் செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக சாலையில் நடந்து செல்ல முடியவில்லை; பள்ளி, கல்லூரிகளுக்கு, பணியிடங்களுக்கு செல்ல முடியவில்லை; தற்போது ரெயிலில் கூட பயணிக்க முடியவில்லை என்ற நிலை வந்திருப்பது வெட்கக்கேட்டின் உச்சம்.
மு.க.ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசு பெண்களின் பாதுகாப்பில் கடுகளவு கூட கவனம் செலுத்தாததன் நீட்சியே இத்தகைய கொடுமைகள் தொடர்வதாகும்.
கர்ப்பிணி பெண் என்று கூட பாராமல் பாலியல் தொல்லை அளித்துள்ள, வக்கிர புத்தியுடைய கயவர்கள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
கோவை-திருப்பதி இடையே சென்றுக்கொண்டிருந்த ரயிலில், கர்ப்பிணி பெண்ணுக்கு இருவர் பாலியல் தொல்லை அளித்ததோடு, அந்த பெண் கூச்சலிட முயற்சி செய்ததால் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதாக வரும் செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது.தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக சாலையில் நடந்து செல்ல… pic.twitter.com/SNLMjXkPxm
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) February 7, 2025