என் மலர்
தமிழ்நாடு

10,000 காலிப்பணியிடங்களில் எப்படி 40,000 பேரை பணியமர்த்த முடியும்?- எடப்பாடி பழனிசாமி

- நீட் தேர்வு ரத்துக்கான ரகசியத்தை துணை முதலமைச்சர் உதயநிதி இப்போது வரை தெரிவிக்கவில்லை.
- காலை உணவுத்திட்டத்தை முதன் முதலில் தொடங்கியது நான் தான்.
தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அ.தி.மு.க. ஆட்சியில் சுமார் 25 லட்சம் பட்டாக்களை வழங்கி உள்ளேன்.
* மக்கள் பிரச்சனைகளை கவனிக்காமல் விளம்பரம் செய்வதிலே தி.மு.க. அரசு கவனமாக உள்ளது.
* முதல்வரும், துணை முதல்வரும் தங்களை விளம்பரப்படுத்துவதிலேயே முனைப்பு காட்டுகின்றனர்.
* புதிய பேருந்துகள் வாங்க ரூ.3000 கோடி ஒதுக்கீடு என்பது வெற்று அறிவிப்பு.
* கடந்த 4 ஆண்டுகளில் 95 சதவீத அறிவிப்புகள் நிறைவேற்றம் என பொய்யாக கூறி உள்ளனர்.
* அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பெண்கள் விடுதி திட்டத்தை தான் தி.மு.க. அரசும் செய்கிறது.
* நீட் தேர்வு ரத்துக்கான ரகசியத்தை துணை முதலமைச்சர் உதயநிதி இப்போது வரை தெரிவிக்கவில்லை.
* நிதி மேலாண்மை குழு அளித்த அறிக்கை என்ன? அதை அரசு செயல்படுத்தியதா? என்ற வெள்ளை அறிக்கை இல்லை.
* காலை உணவுத்திட்டத்தை முதன் முதலில் தொடங்கியது நான் தான்.
* காலை உணவுத் திட்டம் ஒன்றும் புதிய திட்டம் கிடையாது.
* அ.தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை புதிய திட்டங்கள் என சட்டசபையில் அறிவித்துள்ளனர்.
* திடக்கழிவில் இருந்து மின்சாரம், சென்னை அருகில் புதிய நகரம் போன்ற அறிவிப்புகள் அ.தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்டவை.
* வேலைக்கு செல்லும் பெண்களுக்கு விடுதிகள், காலை உணவுத்திட்டம் போன்றவை புதிய திட்டங்கள் அல்ல.
* 3.5 லட்சம் காலிபணியிடம் நிரப்பப்படும் என்றார்கள், ஆனால் 57000 பணியிடங்களுக்கு தான் நியமனம்.
* 4 ஆண்டுகளில் 57,000 காலிப் பணியிடங்களை தான் தி.மு.க. அரசு நிரப்பி உள்ளது.
* ஓராண்டில் மட்டும் எப்படி 40,000 காலி பணியிடங்களை நிரப்ப முடியும்.
* ஓராண்டு காலத்தில் எந்த ஒரு அறிவிப்பையும் நிறைவேற்ற முடியாது.
* டிஎன்பிஎஸ்சி-யில் உள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 10,000 தான். எப்படி 40,000 பணியிடங்களை நிரப்ப முடியும்?
இவ்வாறு அவர் கூறினார்.