என் மலர்
தமிழ்நாடு
எச்.ராஜாவுக்கு 2 அவதூறு வழக்குகளில் தலா 6 மாத சிறை தண்டனை- சென்னை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
- பெரியார் சிலைகளை உடைப்பதாக கூறியது, கனிமொழி குறித்து எதிராக விமர்சனம் உள்ளிட்ட வழக்குகள் தொடரப்பட்டது.
- இரு வழக்குகளில் குற்றவாளி என எம்.பி. எம்.எல்.ஏ மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா குற்றவாளி என்றும் 6 மாதம் சிறை தண்டனை விதித்தும் சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2018-ம் ஆண்டு பெரியார் சிலையை உடைப்பேன் என கருத்து தெரிவித்தது, கனிமொழி எம்.பி.க்கு எதிராக விமர்சனம் செய்தது தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரிய எச்.ராஜாவின் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் மூன்று மாதங்களில் வழக்கின் விசாரணையை முடிக்க எம்.பி. எம்.எல்.ஏ மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, இந்த வழக்குகளில் விசாரணை நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பு விசாரணை நடைபெற்ற நிலையில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது இருந்தது.
இந்த நிலையில், இன்று இந்த வழக்கின் தீர்ப்பை ஜி.ஜெயவேல் கூறினார். அதில், எச்.ராஜாவுக்கு எதிராக காவல்துறை தரப்பில் குற்றச்சாட்டுக்கள் நிருபிக்கப்பட்டுள்ளன. இரு பதிவுகளும் எச்.ராஜாவின் சமூக வலைதள பக்கத்திலிருந்து பதிவு செய்யப்பட்டது என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கிறது. எனவே இந்த வழக்கில் எச்.ராஜா குற்றவாளி என்றும் அவருக்கு தலா 6 மாத சிறைதண்டனையும் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், எச்.ராஜாவுக்கு மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் காலஅவகாசம் வழங்ககி நீதிபதி உத்தரவிட்டார். இதனால் எச்.ராஜா உடனடியாக சிறைக்கு செல்லவேண்டிய அவசியம் ஏற்படாது.