என் மலர்
தமிழ்நாடு

வருமான வரி சோதனை நடைபெறவில்லை: தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம்

- சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுவதாக செய்தி வெளியானது.
- TDS தொடர்பாக வழக்கமான சரிபார்ப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது ஒரு வழக்கமான அலுவலக நடைமுறை என விளக்கம்.
சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக செய்தி வெளியானது. இந்த நிலையில் எந்வித வருமான வரி சோதனையும் நடைபெறவில்லை என தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள விளக்க கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
இன்று தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை இணை ஆணையர் தலைமையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு விதமான செலவினங்களில் உரிய வருமான வரி பிடித்தம் (TDS) தொடர்பாக வழக்கமான சரிபார்ப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது ஒரு வழக்கமான அலுவலக நடைமுறை ஆகும்.
ஆகவே தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் எவ்வித வருமான வரி சோதனையும் நடைபெறவில்லை. வருமான வரி சோதனை என்ற செய்தி தவறானது.
இவ்வாறு தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.