என் மலர்
தமிழ்நாடு

த.வெ.க.-வை ஒரு பொருட்டாகவே பார்க்கவில்லை- விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதிலடி

- நாங்கள் அரசியல் கட்சிகளைப் பற்றி தான் பேச விரும்புகிறோம்.
- தி.மு.க.வை தவிர வேறு எந்த கட்சியையும் சிறுபான்மையினர் நம்ப தயாராக இல்லை.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள த.வெ.க. தலைவர் விஜய், நீங்கள், நாம எல்லோரும் சேர்ந்து தான் இந்த தி.மு.க. அரசை தேர்ந்தெடுத்தோம். ஆனா அவங்க இப்படி ஏமாத்துவாங்கன்னு இப்ப தானே தெரியுது. எல்லாமே இங்கே மாறக்கூடியது தானே. மாற்றத்திற்கு உரியது தானே
2026-ல் நாம எல்லாம் சேர்ந்து மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய இவர்களை மாற்றுவோம். அதற்கு மகளிர் தினமான இன்று நாம் எல்லோரும் சேர்ந்து உறுதி ஏற்போம் என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ரகுபதி கூறியதாவது:
* த.வெ.க.-வை ஒரு பொருட்டாகவே பார்க்கவில்லை.
* நீங்கள் தான் அதை ஒரு பொருட்டாக பேசிக்கொண்டு உள்ளீர்கள்.
* நாங்கள் அரசியல் கட்சிகளைப் பற்றி தான் பேச விரும்புகிறோம்.
* சிறுபான்மையினரை ஏமாற்ற முடியாது. அவர்களுக்கு நண்பர் யார்? நீலிக்கண்ணீர் வடிப்பவர் யார் என்று தெரியும்
* தி.மு.க.வை தவிர வேறு எந்த கட்சியையும் சிறுபான்மையினர் நம்ப தயாராக இல்லை என்று கூறினார்.