என் மலர்
தமிழ்நாடு

அ.தி.மு.க.வை. பா.ஜ.க.விடம் அடகுவைத்தவர் எடப்பாடி பழனிசாமி- அமைச்சர் ரகுபதி

- கஞ்சா தமிழகத்திற்குள் வருவதை மத்திய அரசு தடுக்க தவறிவிட்டு தமிழக அரசின் மீது குற்றம்சாட்டுவது ஏற்கத்தகாதது.
- தி.மு.க. அரசு எந்த வகையிலும் டெல்லிக்கு அடங்கியும் போகாது. அடமானமும் வைக்காது.
தமிழக உரிமைகளை தி.மு.க. அடகு வைத்ததாக கூறிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* கஞ்சா தமிழகத்தில் பயிரிடப்படுவதில்லை. வடமாநிலங்கள், வெளிநாடுகளில் பயிரிடப்படுகிறது.
* கஞ்சா தமிழகத்திற்குள் வருவதை மத்திய அரசு தடுக்க தவறிவிட்டு தமிழக அரசின் மீது குற்றம்சாட்டுவது ஏற்கத்தகாதது.
* அ.தி.மு.க. வை நான்கரை ஆண்டுகள் பா.ஜ.க.விடம் அடகுவைத்துவிட்டு ஆட்சி நடத்தினார் எடப்பாடி பழனிசாமி.
* தி.மு.க. அரசு எந்த வகையிலும் டெல்லிக்கு அடங்கியும் போகாது. அடமானமும் வைக்காது.
* எங்களுக்கு சொந்த புத்தி உண்டு. சொந்த காலில் நிற்கும் சக்தி உண்டு. சொந்த மண்ணை காப்பாற்றும் திறமையும் உண்டு.
* நாங்கள் விவாதத்திற்கு தயார் என எத்தனையோ முறை சொல்லி விட்டோம்.
* இ.பி.எஸ். அழைத்தால் நானே ஒரே மேடையில் விவாதிக்க தயார்.
இவ்வாறு அவர் கூறினார்.