search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழ்நாட்டின் சாபக்கேடு அண்ணாமலை- சேகர்பாபு
    X

    தமிழ்நாட்டின் சாபக்கேடு அண்ணாமலை- சேகர்பாபு

    • நாட்டை காப்பாற்றுவதற்காக தூக்கமில்லாமல்தான் போலீசார் வேலை பார்த்து வருகின்றனர்.
    • திருச்செந்தூரில் முருக பக்தர் இறந்தது இயற்கையானதுதான்.

    சென்னை புளியந்தோப்பில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * அண்ணாமலை போன்ற மாநில தலைவர் தமிழ்நாட்டிற்கான மாபெரும் சாபக்கேடு

    * நாட்டை காப்பாற்றுவதற்காக தூக்கமில்லாமல்தான் போலீசார் வேலை பார்த்து வருகின்றனர்.

    * எங்களுக்கு மடியில் கனமில்லை. வழியில் பயமில்லை. இதுபோன்ற மிரட்டல் உருட்டலுக்கெல்லாம் அஞ்சி யாரும் பதுங்கி வீட்டிலே அமர்ந்துவிட மாட்டார்கள். முன்பைவிட வேகமாக முன்னோக்கி எட்டுகால் பாய்ச்சலில் தி.மு.க. பயணிக்கும்.

    * முதல்வர் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்திற்கான நாளை குறிக்கட்டும் அண்ணாமலை.

    * போலீசே இல்லாமல் தி.மு.க. தொண்டன் உங்களின் போராட்டத்தை தடுப்பான்.

    * திருச்செந்தூரில் முருக பக்தர் இறந்தது இயற்கையானதுதான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×