search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கர்நாடக டூப் போலீஸ் அண்ணாமலை- அமைச்சர் சேகர்பாபு தாக்கு
    X

    கர்நாடக டூப் போலீஸ் அண்ணாமலை- அமைச்சர் சேகர்பாபு தாக்கு

    • தி.மு.க. கூட்டணி அரசியல் ஆதாயத்திற்காக உருவாக்கப்பட்ட கூட்டணி அல்ல.
    • பிரசாந்த் கிஷோர் சாலையில் நடந்து சென்றால் அவரை யார் என்றே தெரியாது.

    எழும்பூர்:

    சென்னை எழும்பூரில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது போதையை ஒழித்துவிடுவேன் என அன்புமணி பேசியது குறித்தும், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பற்றியும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

    பா.ம.க.வை கட்டுப்படுத்துங்கள், அப்பாவும், மகனும் மேடையிலேயே சண்டை போட்டுக்கொள்கின்றனர். சட்டவிரோத செயல்களை செய்பவர்களை ஆதரிக்கும் கர்நாடக டூப் போலீஸ் அண்ணாமலை.

    தி.மு.க. கூட்டணி அரசியல் ஆதாயத்திற்காக உருவாக்கப்பட்ட கூட்டணி அல்ல. இதுகொள்கை சார்ந்த கூட்டணி. இந்த கூட்டணி மேன்மேலும் உறுதியாக இருப்பதை தான் கடந்த 28-ந்தேதி நடைபெற்ற நிகழ்ச்சி எடுத்துக்காட்டு. பிரசாந்த் கிஷோர் சாலையில் நடந்து சென்றால் அவரை யார் என்றே தெரியாது என்றார்.

    Next Story
    ×