search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இந்தி திணிப்பை எதிர்ப்போம்- மு.க.ஸ்டாலின்
    X

    இந்தி திணிப்பை எதிர்ப்போம்- மு.க.ஸ்டாலின்

    • இந்தி உட்பட எந்த மொழி குறித்தும் வீண் விமர்சனங்கள் வேண்டாம்.
    • தொகுதி மறுவரையறை என்பது தமிழ்நாட்டின் பிரச்சனை, பல மாநிலங்களின் பிரச்சனை.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

    * மும்மொழிக் கொள்கை பிரச்சனையில், நம் வாதங்களை மிக எச்சரிக்கையோடு வைக்க வேண்டும்.

    * இந்தி திணிப்பை எதிர்க்கிறோமே தவிர, இந்தி மொழியையோ அந்த மக்களை இல்லை.

    * இந்தி உட்பட எந்த மொழி குறித்தும் வீண் விமர்சனங்கள் வேண்டாம்.

    * இந்தி படிக்கலன்னா நிதி தர மாட்டோம்னு சொல்றது சர்வாதிகாரம் இல்லையா? என்பதுதான் நம் கேள்வியாக இருக்க வேண்டும்.

    * பாராளுமன்ற கூட்டம் நடக்கும்போது அனைத்து தி.மு.க. எம்.பி.க்களும் தவறாமல் அவையில் இருக்க வேண்டும்.

    * தொகுதி மறுவரையறை என்பது தனிப்பட்ட ஒரு கட்சியின் பிரச்சனை இல்லை. தமிழ்நாட்டின் பிரச்சனை.

    * தொகுதி மறுவரையறை என்பது தமிழ்நாட்டின் பிரச்சனை, பல மாநிலங்களின் பிரச்சனை.

    * டெல்லியில் தமிழ்நாட்டு எம்.பி.க்களின் கூட்டத்தை நடத்தி அவர்களின் கருத்துகளை கேட்டு செயலாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    Next Story
    ×