search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பெண்கள் பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சிகள் பச்சை பொய் கூறுகிறார்கள்- அமைச்சர் கீதா ஜீவன்
    X

    பெண்கள் பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சிகள் பச்சை பொய் கூறுகிறார்கள்- அமைச்சர் கீதா ஜீவன்

    • மகளிர் மத்தியில் முதல்வருக்கு உள்ள நற்பெயரை கண்டு பொறுக்க முடியாமல் பேசுகிறார்கள்.
    • சுய உதவிக்குழுக்கள் மூலம் மகளிரை தொழில் முனைவோர்களாக்கியுள்ளது திமுக அரசு.

    பெண்கள் பாதுகாப்பு இல்லை என எதிர்க்கட்சிகள் அனைவரும் பச்சை பொய் கூறி வருகிறார்கள் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அமைச்சர் கீதா ஜீவன் மேலும் கூறியிருப்பதாவது:-

    பெண்களின் வாழ்வாதாரம் உயர எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தது திமுக அரசு. மகளிர் உதவித் தொகை திட்டம் தற்போது பல்வேறு மாநிலங்களில் கொண்டு வரப்பட்டுள்ளது.

    சுய உதவிக்குழுக்கள் மூலம் மகளிரை தொழில் முனைவோர்களாக்கியுள்ளது திமுக அரசு. மகளிர் மத்தியில் முதல்வருக்கு உள்ள நற்பெயரை கண்டு பொறுக்க முடியாமல் பேசுகிறார்கள்.

    தமிழகத்தில் மகளிர் காவல் நிலையம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பெண்கள் பாதிக்கப்படும்போது தைரியமாக புகார் அளிக்கிறார்கள். உடனே நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×