search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்- ஓபிஎஸ் வலியுறுத்தல்
    X

    தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்- ஓபிஎஸ் வலியுறுத்தல்

    • நூற்றுக்கணக்கான வாக்குறுதிகள் தி.மு.க. அரசால் நிறைவேற்றப்படவில்லை.
    • 90 விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்றுவிட்டதாக முதலமைச்சர் கூறுவது மக்களை ஏமாற்றும் செயல்.

    நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களில் நூற்றுக்கு 90 விழுக்காடு திட்டங்களை நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்து இருக்கிறார். இது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல் ஆகும்.

    2021-ம் ஆண்டு தமிழ்நாடு சட்மன்றப் பேரவை பொதுத் தேர்தல் நடைபெற்றபோது 505 வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையின்மூலம் தி.மு.க. அறிவித்திருந்தது. இதில் பெருப்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

    உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால்,

    1. பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்கப்படும்.

    2. டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்படும்.

    3. சட்டப் பேரவை நிகழ்ச்சிகள் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

    4. சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும்.

    5. பெரிய மாநகராட்சிகளில் பறக்கும் சாலைத் திட்டம் செயல்படுத்தப்படும்.

    6. மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுந்தும் முறை அமல்படுத்தப்படும். 7. நியாய விலைக் கடைகளில் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும்.

    8. நியாய விலைக் கடைகளில் மீண்டும் உளுத்தம் பருப்பு வழங்கப்படும். 9. அனைந்து கிராமங்களுக்கும் தூய்மையான குடிநீர் வழங்கப்படும்.

    10. கடலோர மாவட்டங்களில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

    11. முக்கியமான மலைக் கோவில்களில் கேபிள் கார் வசதி செய்து தரப்படும்.

    12. முதியோர் உதவித் தொகை 1,500 ரூபாயாக உயர்த்தப்படும்.

    13 . நடைபாதைவாசிகளுக்கு இரவு நேரக் காப்பகங்கள் அமைக்கப்படும்.

    14. தமிழ்நாடு ஆறுகள் பாதுகாப்புத் திட்டம் உருவாக்கப்படும்.

    15. மாநகராட்சி பகுதிகளில் புகையில்லாப் பேருந்துகள் இயக்கப்படும்.

    16. கொரோனா தொற்று தாக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்.

    17. குழந்தைகளுக்கு உணவுக்கூடைத் திட்டம் அமல்படுத்தப்படும்.

    18. பத்திரிகையாளர் நலன் காக்க தனி ஆணையம் அமைக்கப்படும்.

    19. சிறு குறு விவசாயிகளுக்கு புதிய மோட்டார் வாங்க 10000 ரூபாய் மானியம்

    20. நீட் தேர்வுரத்து.

    21. அரசுத் துறைகளில் காலியாக உள்ள 3% இலட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்.

    22. புதிதாக 2 இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

    23. தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75 விழுக்காடு வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க சட்டம் கொண்டு வரப்படும்.

    24, 70 வயதிற்கு மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் 10 விழுக்காடு உயர்த்தப்படும்.

    25. கருவுற்ற பெண்களுக்கு வீடு தேடி மருத்துவ வசதி.

    26. புதிய தனி கனிம வள அமைச்சகம் உருவாக்கப்படும்.

    27. கல்வி நிறுவனங்களில் ஒய் பை வசதி செய்து தரப்படும்.

    28. அரகத் துறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் தற்காலிக பணியில் உள்ள அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.

    29. போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்.

    30. கரும்புக்கு ஆதார விலை டன் ஒன்றுக்கு 4000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

    31. நீர் மேலாண்மை ஆணையம் அமைத்திட சட்டம் கொண்டு வரப்படும்.

    32. 2000 கோடி ரூபாய் மதிப்பில் 200 தடுப்பணைகள் கட்டப்படும்.

    33. ஏழையெளிய வணிகர்களுக்கு 15000 ரூபாய் வரை வட்டியில்லாக் கடன்.

    34. மீனவ சமுதாயந்தினர் பழங்குடியின பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.

    35. பொதுப் பட்டியலில் உள்ள கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும்.

    36. மத்திய அரசு பள்ளிகள் உட்பட தமிழக பள்ளிகள் அனைத்திலும் எட்டாம் வகுப்பு வரை தமிழை கட்டாயப் பாடம் ஆக்கிட சட்டம் கொண்டு வரப்படும்.

    37. அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை பெற்றுத் தரப்படும். 38. வெளிநாடு வாழ் தமிழர்கள் துறை அமைக்கப்படும்.

    39. பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.

    40, இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான உச்ச வரம்பு 25 இலட்சமாக உயர்த்தப்படும்.

    41. தனியார் துறையில் இட ஒதுக்கீடு.

    42. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.

    43. பக்கிங்காம் கால்வாய் சீரமைக்கப்படும்.

    44. சென்னை சிறுசேரி பகுதியில் நவீனப் பேருந்து நிலையம்.

    45. திருச்சி, மதுரை, சேலம், நெல்லை மற்றும் கோவை பகுதிகளில் பெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும்.

    46. வேலூர், கரூர், ஒசூர், இராமநாதபுரத்தில் புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்.

    47. 100 நாட்கள் வேலைத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்.

    48. கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.

    49. உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ்.

    50. அனைத்து அரசு அலுவலகங்களிலும் தமிழ் அலுவல் மொழிப் பிரிவு

    51. ஊழலற்ற நேர்மையான நிர்வாகம்.

    52. தமிழ்நாட்டின் கடன் கமை குறைக்கப்படும்.

    53. பொதுத் துறை நிறுவனங்கள் சீரமைக்கப்படும்.

    54. அனைத்து உணவுப் பொருளுக்கும் குறைந்தபட்ச ஆதார விவை.

    55. கிருஷ்ணகிரியில் தோட்டப் பல்கலைக்கழகம்.

    56. ஈரோட்டில் நவீன மஞ்சள் ஆராய்ச்சி நிலையம்.

    57. தூத்துக்குடி, வேலூர், சுரூர், தர்மபுரி மாவட்டங்களில் பேரிட்சை வளர்க்க

    சிறப்பு நிதியுதவி. 58. காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம்.

    59. தாமிரபரணி கருமேனி -நம்பியாறு இணைப்புத் திட்டம்.

    60. நெல்லை, தூத்துக்குடி, விருதுநகரில் 40000 ஏக்கர் பயனடைய கன்னிகா மதகுக் கால்வாய் சீரமைக்கப்படும்.

    61. தரைப் பாலங்கள் உயர்மட்டப் பாலங்களாக மாற்றப்படும்.

    62. சென்னை நகரின் ஆறுகள் பாதுகாப்பிற்கு 5000 கோடி ரூபாய் ஒதுக்கீடு

    63. கச்சத்தீவுமீட்டி,

    64 மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் புதிய மருத்துவக்

    கல்லூரிகள் உருவாக்கப்படும்.

    65. மூன்று ஆண்டுகளுக்குள் தமிழ்நாட்டில் நூறு சதவிகித கல்வியறிவு 66. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பினை

    பெறாதவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

    67. தொழில் துறையை மீட்டெடுக்க 15,000 கோடி ரூபாய் நிதி உதவி.

    68. இந்திய வார்ப்பட நிறுவனம் கோவையில் தொடங்கப்படும்.

    69. திண்டுக்கல், வேலூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் நோல் பொருள்கள் பூங்கா அமைக்கப்படும்.

    70. அனைத்து நகரங்களிலும் நிலத்தடிப் புதைவட மின்சாரக் கம்பிகள் பொருத்தப்படும்.

    71. விண்ணப்பித்த 15 நாட்களில் புதிய குடும்ப அட்டைகள்.

    72. ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் மானிய விலையில் மூன்று எல்.இ.டி. பல்புகள்.

    73. பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை களைய சைபர் காவல் நிலையங்கள்.

    74. அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்படும்.

    75. தமிழக அரசின் பணி தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண மாநிலத் தீர்ப்பாயம் மீண்டும் அமைக்கப்படும்.

    76. இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும்.

    77. அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும்.

    78. கோயில்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு 5000 ரூபாய் ஓய்வூதியம்.

    79. சாலை ஓரங்களில் உறங்கிடும் மக்களுக்கு இரவு நேரக் காப்பிடங்கள்

    அமைக்கப்படும்.

    80. கோவை, நெல்லை, திருச்சி மற்றும் கிருஷ்ணகிரியில் மாநில அரசின் நிதியிலிருந்து புதிய உயர் சிறப்பு மருத்துவமனைகள் கட்டப்பட்டு, மூன்று

    ஆண்டுகளுக்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

    81. தாம்பரம், மதுரவாயல், சோழிங்கநல்லூர் ஆகிய மூன்று இடங்களில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய அரசு மருத்துவமனைகள்.

    82. ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்போருக்கு ஊக்கத் தொகை

    83. குறைந்தது 100 நாட்கள் சட்டப் பேரவை.

    84. சட்டம் -ஒழுங்கை நிலைநாட்டுதல்,

    85. போலீஸ் கமிஷன் அமைத்தல்,

    86. சென்னை போன்ற பெருநகரங்களில் நவீன அடுக்குமாடி கார் நிறுத்தும் வசதிகள்.

    87. கொடைக்கானல் பழனி மலைகளுக்கு இடையே கேபிள்கார் போக்குவரத்து

    88. மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவித்தல்.

    89. சேலம் மற்றும் தூத்துக்குடி விமான நிலையங்கள் விரிவாக்கம். 90. கட்டுமானப் பொருட்கள் பொதுமக்களுக்கு நியாயமான விலையில் கிடைக்க வழிவகை செய்தல்.

    போன்ற இன்னும் நூற்றுக்கணக்கான வாக்குறுதிகள் தி.மு.க. அரசால் நிறைவேற்றப்படவில்லை. பொத்த வாக்குறுதிகளில் 20 விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு 90 விழுக்காடு நிறைவேற்றிவிட்டதாகக் கூறுவது ஜமக்காளத்தில் வடிகட்டின பொய் நிறைவேற்றப்பட்ட பல வாக்குறுதிகளும் அரைகுறையாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

    உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால், நகைக் கடன் ரத்து என்று சொல்லிவிட்டு, 35 இலட்சம் பேருக்கு அது மறுக்கப்பட்டு இருக்கிறது. சில வாக்குறுதிகளை நிறைவேற்றாததற்குப் பதிலாக அதற்கு முற்றிலும் எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

    மாதம் ஒரு முறை மின் கட்டணம் என்று சொல்லிவிட்டு, மின் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஏற்கெனவே நடைமுறையில் இருந்த தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம், இருசக்கர வாகன மானியத் திட்டம், மடிக்கணினி வழங்கும் திட்டம் ஆகியவை முடக்கப்பட்டுள்ளன.

    பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, ஓய்வூதியத் திட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்களை ஆய்வு செய்து வருவதாக முதலமைச்சர் தெரிவித்து இருக்கிறார். ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கூடுதல் வரிகளை விதித்து மக்களை வாட்டி வதைக்கின்ற அரசாக தி.மு.க அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது.

    உண்மை நிலை இவ்வாறிருக்க, 90 விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்றுவிட்டதாக முதலமைச்சர் கூறுவது மக்களை ஏமாற்றும் செயல். முதலமைச்சர் அவர்களின் கூற்றில் உண்மை இருப்பின், தி.மு.க.வின் 505 வாக்குறுநிகள் மற்றும் அவை நிறைவேற்றப்பட்டதற்கான ஆணைகள் அடங்கிய ஒரு வெள்ளை அறிக்கையினை தி.மு.க. அரசு வெளியிட வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

    Next Story
    ×