search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தீர்ப்பு வர வாய்ப்பு உள்ளது- கே.சி. பழனிசாமி
    X

    எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தீர்ப்பு வர வாய்ப்பு உள்ளது- கே.சி. பழனிசாமி

    • அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. தவிர வேறு எந்த கட்சிகளும் இல்லை.
    • எடப்பாடி பழனிசாமி தலைமையிடம் யாருக்கும் நம்பிக்கை இல்லை.

    அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.யும், வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவருமான கே.சி.பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய விதிகளின் படி இந்த இயக்கம் வழிநடத்தப்பட வேண்டும் என்ற எங்கள் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றியாகத்தான் பார்க்கிறோம்.

    முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், தேர்தல் ஆணையத்தின் பணியை குமாஸ்தா பணி என தெரிவித்துள்ளார். இந்த குமாஸ்தா தானே இரட்டை இலை சின்னத்தில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திடலாம் என்று ஓராண்டுக்கு முன்பு கடிதம் கொடுத்தார். அந்த குமாஸ்தா கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் தானே எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக ஏ பார்ம், பி பார்மில் கையெழுத்து போட்டுக் கொண்டு இருக்கிறார்.

    சின்னம் தொடர்பான அந்த விதிகளின் கீழ் இதை பரிசீலனை செய்யுங்கள் என உத்தரவு கொடுத்துள்ளார்கள். எனவே அதனை மீண்டும் பரிசீலனை செய்யும் உரிமையை தேர்தல் ஆணையம் இன்று பெற்றிருக்கிறது.

    இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு பாதகமாக தீர்ப்பு வர அதிக வாய்ப்புள்ளது. அப்போது அ.தி.மு.க. தலைமை மாற்றத்தை நோக்கி நகரலாம். இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் அபாயமும் உள்ளது.

    அ.தி.மு.க. தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. எதிர்க்கட்சி அரசியலை கூட அவர் சரியாக செய்யவில்லை. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில் தி.மு.க.வை வீழ்த்தும் வலிமை அ.தி.மு.க.விற்கு இல்லை. அ.தி.மு.க.வின் அனைத்து மட்டங்களிலும் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி உள்ளது.

    முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தற்போது தனது அதிருப்தியை வெளிக்காட்டி விட்டார். அதிருப்தி இருந்ததால் தான் அதனை வெளியில் சொல்லி உள்ளார்.

    அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. தவிர வேறு எந்த கட்சிகளும் இல்லை. பிரசாந்த் கிஷோர் அ.தி.மு.க. தேர்தல் ஆலோசனை ஆலோசகராக வருவார் என்றார்கள். ஆனால் அவர் தமிழக வெற்றிக் கழகத்திற்கு சென்று விட்டார். எடப்பாடி பழனிசாமி எதையும் கண்டு கொள்ளாமல் தனது தலைமையை காப்பாற்றுவதில் மட்டும் குறியாக இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி தலைமையிடம் யாருக்கும் நம்பிக்கை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×