search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வைகை அணையில் பாசனத்திற்கு மீண்டும் தண்ணீர் திறப்பு
    X

    வைகை அணையில் பாசனத்திற்கு மீண்டும் தண்ணீர் திறப்பு

    • கடந்த சில நாட்களாக பாசனத்திற்கான நீர் நிறுத்தப்பட்டு மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கனஅடி நீர் திறக்கப்பட்டது.
    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 45.60 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. பருவமழை கைகொடுத்ததால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்பட்டது.

    கடந்த சில நாட்களாக பாசனத்திற்கான நீர் நிறுத்தப்பட்டு மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை முதல் பாசனத்திற்கு 450 கனஅடி நீருடன் சேர்த்து 519 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 508 கனஅடி நீர் வருகிறது.

    அணையின் நீர்மட்டம் 65.42 அடியாக உள்ளது. 4724 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 120.55 அடியாக உள்ளது. 104 கனஅடி நீர் வருகிறது. 556 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 2737 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 45.60 அடியாக உள்ளது. 21 கனஅடி நீர் வருகிறது. 75 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 107.58 அடியாக உள்ளது. 2.5 கனஅடி நீர் வருகிறது. 25 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 37.50 அடியாக உள்ளது. 6 கனஅடி நீர் வருகிறது. 14.47 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    போடி 0.4, உத்தமபாளையம் 0.8, கூடலூர் 1.2, சண்முகாநதி 3.4 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

    Next Story
    ×