search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கர்ப்பிணி பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி- தெற்கு ரெயில்வே
    X

    கர்ப்பிணி பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி- தெற்கு ரெயில்வே

    • தண்டவாளத்தில் படுகாயங்களுடன் கிடந்த கர்ப்பிணி பெண்ணை மீட்ட ரெயில்வே போலீசார்.
    • ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில், ஹேமராஜூ என்பவர் கைது.

    கோயம்புத்தூரில் இருந்து திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரெயிலில் கர்ப்பிணி பெண் பயணம் செய்தார்.

    வேலூர் கே.வி. குப்பம் அருகே ரெயில் சென்று கொண்டிருந்தபோது கர்ப்பிணி பெண் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த சிலர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து கத்திக் கூச்சலிட்டுள்ளார்.

    கர்ப்பிணி பெண் குரல் கேட்டு சக பயணிகள் வருவதற்குள் அந்த நபர்கள் அவரை ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

    தண்டவாளத்தில் படுகாயங்களுடன் கிடந்த கர்ப்பிணி பெண்ணை மீட்ட ரெயில்வே போலீசார் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில், ஹேமராஜூ என்பவரை கைது செய்தனர்.

    இந்நிலையில், கோவை- திருப்பதி விரைவு ரெயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட 4 மாத கர்ப்பிணி பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    மேலும், கர்ப்பிணி பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் சிசிடிவி மூலம் அடையாளம் காணப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    Next Story
    ×