என் மலர்
தமிழ்நாடு

2026-ல் தமிழரா? திராவிடரா? என போட்டியிடுவோமா? - தி.மு.க.-வுக்கு சீமான் சவால்

- என்னை எதிர்த்து நின்று சமாளிக்க முடியாமல் அவதூறுகளை பரப்புகின்றனர்.
- அதிகபட்சம் என்னை சிறையில் அடைக்க முடியும், சிறையில் அடையுங்கள்.
தருமபுரி:
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
* 234 தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளரை போட முடியுமா?
* 2026 தேர்தலில் தமிழரா? திராவிடரா? என போட்டியிடுவோம்.
* பல ஆண்டுகளை தமிழகத்தை ஆண்ட தி.மு.க. கட்சி ஓட்டு பணம் கொடுக்காமல் தேர்தலை சந்திக்க தயாரா?
* என்னை எதிர்த்து நின்று சமாளிக்க முடியாமல் அவதூறுகளை பரப்புகின்றனர்.
* அதிகபட்சம் என்னை சிறையில் அடைக்க முடியும், சிறையில் அடையுங்கள்.
* காவல் ஆய்வாளரின் தந்தை ராஜீவ் கொலையின் போது இறந்ததற்கு எதுவும் செய்ய முடியாது.
* முதன் முதலில் இந்தி பள்ளியை தமிழகத்தில் திறந்தவர் பெரியார்.
* தமிழ்நாட்டில் அதிக வழக்குகளை எதிர்கொள்ளும் தலைவராக நான் இருக்கிறேன். 230 வழக்குகளை கடந்து விட்டேன்.
* எத்தனை வழக்குகள் போட்டாலும் அஞ்சுபவன் நான் அல்ல, எல்லா வழக்குகளையும் எதிர்கொள்ளத் தயார் என்றார்.