search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சீமானும் அண்ணாமலையும் நிழலோடு யுத்தம் செய்கின்றனர்- சேகர்பாபு
    X

    சீமானும் அண்ணாமலையும் நிழலோடு யுத்தம் செய்கின்றனர்- சேகர்பாபு

    • நாங்கள் நிஜத்தோடு யுத்தம் செய்து கொண்டிருக்கிறோம்.
    • திருக்கோவில்களில் சமஸ்கிருதத்தில் அர்ச்சனையை தடுக்கவில்லை.

    சென்னை:

    தொடர்ந்து fight பண்ணிட்டே இருங்கள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஊக்கம் அளித்தது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:

    * சீமானும் அண்ணாமலையும் நிழலோடு யுத்தம் செய்கின்றனர். நாங்கள் நிஜத்தோடு யுத்தம் செய்து கொண்டிருக்கிறோம்.

    * சீமானும் அண்ணாமலையும் செய்யும் யுத்தத்திற்கும், தி.மு.க.வின் யுத்தத்திற்கும் பல வேறுபாடுகள் உள்ளது.

    * கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர் பெயர், கைப்பேசி எண்ணுடன் விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது.

    * தமிழில் அர்ச்சனை செய்தால் அர்ச்சனை சீட்டு கட்டணத்தில் 60 சதவீதத்தை ஈட்டுத்தொகையாக வழங்கி வருகிறோம்.

    * திருக்கோவில்களில் சமஸ்கிருதத்தில் அர்ச்சனையை தடுக்கவில்லை. அதே நேரத்தில தமிழ் வழிபாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து உள்ளோம்.

    * எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. ஒரு மொழியை திணிக்கின்றபோதான் அதற்கு எதிர்த்து நிற்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×