search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் வரை இயக்கம்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு
    X

    குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் வரை இயக்கம்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு

    • ரெயில் குருவாயூரில் இருந்து புறப்படுவதற்கு மாற்றாக நாகர்கோவில் டவுனில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும்.
    • திருவனந்தபுரம் சென்டிரல்-கன்னியாகுமரி இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, திருவனந்தபுரம் சென்டிரலில் நிறுத்தப்படும்.

    கேரளா மாநிலம் திருவனந்தபுரம் கோட்டத்திற்குட்பட்ட நெய்யாற்றின்கரா-பாரசாலா ரெயில் நிலையம் இடையே பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் சில ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    * சென்னை எழும்பூரில் இருந்து வரும் 28-ந்தேதி காலை 10.20 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16127), நாகர்கோவில் டவுன்-குருவாயூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, நாகர்கோவில் டவுனில் நிறுத்தப்படும்.

    * மறுமார்க்கமாக, குருவாயூரில் இருந்து வரும் 29-ந்தேதி இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16128), குருவாயூர்-நாகர்கோவில் டவுன் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் குருவாயூரில் இருந்து புறப்படுவதற்கு மாற்றாக நாகர்கோவில் டவுனில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும்.

    * மங்களூரு சென்டிரலில் இருந்து வரும் 28-ந்தேதி காலை 5 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி வரும் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரெயில் (16649), திருவனந்தபுரம் சென்டிரல்-கன்னியாகுமரி இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, திருவனந்தபுரம் சென்டிரலில் நிறுத்தப்படும்.

    * மறுமாா்க்கமாக, கன்னியாகுமரியில் இருந்து வரும் 29-ந்தேதி அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு மங்களூரு சென்டிரல் செல்லும் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரெயில் (16650), கன்னியாகுமரி-திருவனந்தபுரம் சென்டிரல் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் கன்னியாகுமரியில் இருந்து புறப்படுவதற்கு மாற்றாக, திருவனந்தபுரம் சென்டிரலில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்பட்டு மங்களூரு சென்டிரல் செல்லும்.

    * மதுரையில் இருந்து வரும் 28-ந்தேதி இரவு 11.20 மணிக்கு புறப்பட்டு கேரள மாநிலம் புனலூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16729), அதற்கு மாற்றாக மதுரையில் இருந்து இரவு 11.50 மணிக்கு (30 நிமிடம் தாமதமாக) புறப்பட்டு புனலூர் செல்லும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×