search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழக பட்ஜெட் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வாகாது- என்.ஆர்.தனபாலன் கருத்து
    X

    தமிழக பட்ஜெட் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வாகாது- என்.ஆர்.தனபாலன் கருத்து

    • நீட் தேர்வு, சட்டம் ஒழுங்கு பராமரிப்பு போன்ற மக்களின் எதிர்பார்ப்பும் மிகப்பெரிய ஏமாற்றத்தையே தந்துள்ளது.
    • அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

    தமிழக அரசின் 2025-26ம் ஆண்டிற்கான பட்ஜெட்டால் தமிழக மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வாகாது என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தமிழக அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் வாங்கியுள்ள நான்கு லட்சம் கோடி ரூபாய் கடனை திருப்பி அடைப்பதற்கான திட்டங்கள் இல்லாதது தமிழக அரசை திவால் ஆகி விடும் என்பதில் ஐயமில்லை.

    தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிபடி எரிவாயு சிலிண்டர் விலையில் ரூபாய் 100 குறைக்கப்படும் என்ற அறிவிப்பும், ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வு ஊதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பும், மாத ஒரு முறை மின் கட்டண கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற வாக்குறுதியும் மாணவர்களின் கல்வி கடன், மகளிர் சுய உதவி குழுக்களின் கடன் தள்ளுபடி போன்ற தேர்தல் வாக்குறுதிகளும் நீட் தேர்வு, சட்டம் ஒழுங்கு பராமரிப்பு போன்ற மக்களின் எதிர்பார்ப்பும் மிகப்பெரிய ஏமாற்றத்தையே தந்துள்ளது.

    அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

    நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத பட்ஜெட்டாக உள்ளது. தமிழக மக்களுக்கு பயன்படாத பட்ஜெட்டை தமிழக அரசு அறிவித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×