என் மலர்
தமிழ்நாடு
X
வார்டு மறு வரையறை முடிந்த பிறகே உள்ளாட்சி தேர்தல்- தமிழக அரசு உறுதி
Byமாலை மலர்21 Dec 2024 12:22 PM IST
- வார்டு மறு வரையறை, இட ஒதுக்கீடு குறித்து முடிவு செய்யாமல் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகாது.
- அரசின் உத்தரவாதத்தை ஏற்று இதுதொடர்பான வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.
வார்டு மறுவரையறை மற்றும் பட்டியலினத்தவர், பழங்குடியினர், மகளிருக்கு ஒதுக்கப்படும் வார்டுகள் குறித்து முடிவு செய்த பிறகே தேர்தல் அறிவிப்பை வெளியிட கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது, "வார்டு மறு வரையறை, இட ஒதுக்கீடு நடைமுறைகள் முடிந்த பிறகு தான் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்" என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
மேலும், வார்டு மறு வரையறை, இட ஒதுக்கீடு குறித்து முடிவு செய்யாமல் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகாது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அரசின் உத்தரவாதத்தை ஏற்று இதுதொடர்பான வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.
Next Story
×
X