என் மலர்
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் இயல்பைவிட வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம்

- தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் 10, 11, 12 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
- காலையில் லேசான பனிமூட்டம் இருக்கும்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
* தமிழகத்தில் அநேக இடங்களில் இயல்பிலிருந்து 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகி உள்ளது.
* தமிழகத்தில் வெயில் கொளுத்த ஆரம்பித்துள்ள நிலையில் திருப்பத்தூரில் 39.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. ஃபாரன்ஹீட்டில் 102 டிகிரியாக பதிவாகி உள்ளது.
* இன்று முதல் 9-ந்தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
* தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும். காலையில் லேசான பனிமூட்டம் இருக்கும்.
* தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்.
* தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் 10, 11, 12 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
* இன்று முதல் 9-ந்தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
* சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.