search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நீலகிரி மாவட்டத்தில் எந்த ஒரு அரசு பள்ளியையும் மூடும் திட்டமும், உத்தரவும் இல்லை- மாவட்ட கல்வி அலுவலர் நந்தகுமார்
    X

    நீலகிரி மாவட்டத்தில் எந்த ஒரு அரசு பள்ளியையும் மூடும் திட்டமும், உத்தரவும் இல்லை- மாவட்ட கல்வி அலுவலர் நந்தகுமார்

    • கடந்த 7-ந்தி அன்று, மாவட்டக் கல்வி அதிகாரி (DEO) மூலம் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
    • கூட்டத்தில் பள்ளிகளின் வருகைப்பதிவை மேம்படுத்துதல் மற்றும் மாவட்டத்தின் பள்ளிகளில் ஒட்டுமொத்த கல்வித் திறனை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

    நீலகிரி:

    மாவட்ட கல்வி அலுவலர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    நீலகிரி மாவட்டத்தில் 287 அரசு நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகள் உள்ளன. கல்வியின் தரம் மற்றும் மாணவர்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான சமீபத்திய முயற்சியாக, கடந்த 7-ந்தி அன்று, மாவட்டக் கல்வி அதிகாரி (DEO) மூலம் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

    இக்கூட்டத்தில் பள்ளிகளின் வருகைப்பதிவை மேம்படுத்துதல் மற்றும் மாவட்டத்தின் பள்ளிகளில் ஒட்டுமொத்த கல்வித் திறனை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள எந்த ஒரு அரசுப் பள்ளியையும் மூடும் திட்டமோ, உத்தரவுகளோ இல்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×