search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது - மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல் தீர்மானம்
    X

    சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது - மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல் தீர்மானம்

    • தமிழ்நாடு சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாத கூட்டம் நடைபெறுகிறது.
    • சட்டசபையில் கேள்வி நேரம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    தமிழ்நாடு சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த மார்ச் 14-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் செய்து ஒவ்வொரு துறையிலும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வாசித்தார்.

    இதைத் தொடர்ந்து 2025-26 வேளாண் பட்ஜெட் கடந்த மார்ச் 15-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதனை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து அறிவிப்புகள் மற்றும் திட்டங்களை வாசித்தார்.

    தமிழ்நாடு சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாத கூட்டம் நடைபெறுகிறது. மேலும், சபாநாயகர் மீது அ.தி.மு.க. சார்பில் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதும் விவாதம் நடைபெறுகிறது.

    இந்தநிலையில் சட்டசபை கூடியதும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

    முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.சுந்தரம், மா.கோவிந்தராஜலு, குணசீலன் மற்றும் மருத்துவர் செரியன் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

    இதையடுத்து கேள்வி நேரம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×