என் மலர்
தமிழ்நாடு

தமிழக பட்ஜெட்: மதுரையில் உலகத் தமிழ் கண்காட்சி மையம் அமைக்கப்படும்

- 500 தமிழ் இலக்கிய நூல்களை மொழிபெயர்க்க ரூ.10 கோடி ஒதுக்கப்படும்.
- இந்திய துணை கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து தான் தொடங்க வேண்டும்.
சென்னை:
தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* திருக்குறள் மேலும் 45 மொழிகளில் மொழிபெயர்க்க ரூ.1.33 கோடி நிதி ஒதுக்கப்படும்.
* 500 தமிழ் இலக்கிய நூல்களை மொழிபெயர்க்க ரூ.10 கோடி ஒதுக்கப்படும்.
* ஓலை சுவடிகளை மின்பதிப்பாக்கம் செய்ய ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* சிங்கப்பூர், துபாய், கோலாலம்பூரில் தமிழ் புத்தக கண்காட்சி நடத்திட ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* ஐ.நா.வின் அனைத்து அலுவல் மொழிகளிலும் மொழிப்பெயர்ப்பு பெற்ற நூல் என்ற பெருமையை திருக்குறள் பெறும்.
* தமிழின் தொன்மை தொடர்ச்சியை அறிய மதுரையில் உலகத் தமிழ் கண்காட்சி மையம் அமைக்கப்படும்.
* இந்திய துணை கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து தான் தொடங்க வேண்டும்.
* தமிழ் புத்தக திருவிழா இனி மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற மற்ற நகரங்களிலும் நடத்தப்படும்.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.