search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    TN Budget 2025-26: பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள் - முழு விவரம்..

    • நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
    • 2025-26 பட்ஜெட் சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

    தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று காலை 9.30 மணிக்கு 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். கடந்த ஆண்டுகளில் தமிழக அரசுக்கு வந்த வருவாய் வரவுகள், செலவுகள், வாங்கிய கடன், கடனுக்கான வட்டி எவ்வளவு என்பது போன்ற தகவல்களை அவர் வெளியிடுகிறார்.

    மேலும், வருகிற நிதியாண்டு (2025-26) தமிழ்நாடு அரசு உத்தேசமாக மேற்கொள்ள உள்ள செலவுகள், உத்தேசமான வருவாய் வரவுகள் போன்ற தகவல்களையும் அவைக்கு அளிக்கிறார். தமிழ்நாடு பட்ஜெட் குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்..

    மகளிருக்கான முக்கிய அறிவிப்புகள்:

    ரூ.10 லட்சம் வரை மதிப்புள்ள அசையா சொத்துக்களை பெண்கள் பெயரில் பதிவு செய்தால் 1 சதவீதம் பதிவு கட்டணம் குறைக்கப்படும்.

    மகளிருக்கு 20 சதவீத மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை தொழில் முனைவோர் கடன் வழங்கப்படும்.

    பெண்களின் பொருளாதார பங்களிப்பை அதிகரிக்க 1 லட்சம் மகளிரை தொழில் முனைவோராக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    மகளிர் உரிமை தொகைக்கு ரூ.8,597 கோடி வழங்கப்படும். சமூக நலன் மகளிர் உரிமை தொகைக்கு ரூ.8,597 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    பெண்களுக்கான விடியல் பயணம் திட்டத்திற்கு மானியமாக ரூ.3,600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    கருப்பைவாய் புற்று நோயை தடுக்க 14 வயது சிறுமிகள் அனைவருக்கும் தடுப்பூசி திட்டம் செயல் படுத்தப்படும். இதற்காக ரூ.36 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்புகள்:

    அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.2000 கோடியில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு கை கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும்.

    சமக்ரசிக்சா திட்டத்திற்கு மத்திய அரசு நிதி தரவில்லை என்றாலும் தமிழக மாணவர்களின் கல்வியில் ஒரு துளிகூடபாதிப்பு இருக்காது.

    அண்ணா பல்லைக்கழகத்துக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்படும்.

    அரசு பொறியியல் கல்லூரிகளில் இணைய பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் சார்ந்த புதிய பட்டப்படிப்புகள் அறிமுகம் செய்யப்படும்.

    அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 15 ஆயிரம் இடங்கள் ஒதுக்கப்படும். திறன்மிகு வகுப்பறை, நூலகம் உள்ளிட்ட உள்கட்டமைப்பை ஏற்படுத்த ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களுக்கு ரூ.550 கோடி ஒதுக்கப்படும். உயர்க்கல்வித் துறைக்கு ரூ.8,494 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    தமிழக மாணவர்கள் ஐ.ஏ.எஸ். பணியிடங்களில் தேர்ச்சி பெறுவதை அதிகரிக்க ஊக்குவிக்கும் வகையில் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    சதுரங்க விளையாட்டை ஊக்குவிக்க பள்ளிப்பாடத்தில் சதுரங்கத்தை சேர்த்து உடற்கல்வி பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படும்.

    தமிழகத்தில் குன்னூர், நத்தம், சென்னை ஆலந்தூர், விக்கிரவாண்டி, செய்யூர் உள்ளிட்ட 10 இடங்களில் கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.

    மருத்துவத் துறை முக்கிய அறிவிப்புகள்:

    தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறைக்கு ரூ.21,906 கோடி நிதி ஒதுக்கீடு.

    நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் புற்று நோய், இருதய நோய் சோதனை மேற்கொள்ள ரூ.40 கோடி ஒதுக்கீடு.

    புற்று நோயை தொடக்க நிலையிலேயே கண்டறியும் கருவிகளை வாங்க ரூ.110 கோடி ஒதுக்கீடு.

    காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு புற்று நோய் மருத்துமனையை தரம் உயர்த்த ரூ.120 கோடி ஒதுக்கப்படும்.

    தொழிற்துறை முக்கிய அறிவிப்புகள்:

    புதிய 10 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு ரூ.152 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    செமி கண்டக்டர் உயர்திறன் தொழில் மையம் ரூ.50 கோடியில் ஏற்படுத்தப்படும்.

    ஒசூரில் ரூ.400 கோடியில் டைடல் பூங்கா அமைக்கப்படும். விருது நகரில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படும்.

    மதுரை, மேலூர், கடலூரில் காலணி தொழிற்பூங்கா ரூ.250 கோடியில் அமைக்கப்படும்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 200 ஏக்கரில் புதிய தொழிற்பூங்கா அமைக்கப்படும்.

    பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

    ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்.

    தொழில் முதலீடு ஊக்கு விப்பு துறைக்கு ரூ.3,915 கோடி ஒதுக்கீடு செய்யப் படும்.

    10 லட்சம் சிறு-குறு நடுத்தர தொழில் நிறுவனங்க ளுக்கு ரூ.2.5 லட்சம் கோடி வங்கி கடன் வழங்கப்படும்.

    விண்வெளி சார்ந்த புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க நிதி ஒதுக்கப் படும்.

    குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கு ரூ.1,918 கோடி ஒதுக்கப்படும்.

    நீர்வளம் சார்ந்த முக்கிய அறிவிப்புகள்:

    கோவை, திருச்சி, மதுரை சேலம், நெல்லையில் துணை திறன்மிகு மையங்கள் உருவாக்கப்படும். ஒருங்கிணைந்த நீர் மேம்பாட்டு திட்டம் ரூ.2 ஆயிரம் கோடியில் செயல்படுத்தப்படும்.

    வெள்ள நீரை சேமிக்கும் வகையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை கோவளத்தில் ரூ.350 கோடியில் 3010 ஏக்கரில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும்.

    நீர்வளத் துறைக்கு ரூ.9,460 கோடி ஒதுக்கப்படும்.

    திருவான்மியூர், பாலவாக்கம், உத்தண்டி, குலசேகரன்பட்டினம், சாமியார்பேட்டை, கீழ்புதுப்பட்டு கடற்கரைக்கு நதி நீலக் கொடி சான்றிதழ் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

    இதர முக்கிய அறிவிப்புகள்:

    தமிழ்நாட்டில் வெள்ளி மலை, ஆழியாறு பகுதிகளில் ரூ.11,721 கோடி மதிப்பீட்டில் புதிதாக 2 புனல்மின் நிலையங்கள் அமைக்கப்படும்.

    எரிசக்தி துறைக்கு ரூ.21,168 கோடி ஒதுக்கப்படும்.

    வேட்டை பறவை வாழிடங்களை பாதுகாக்க ரூ.1 கோடியில் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.

    சிங்கப்பூர் அறிவியல் மையத்துடன் இணைந்து சென்னையில் அறிவியல் மையம் ரூ.100 கோடியில் அமைக்கப்படும்.

    சென்னை, கோவையில் அடிப்படை அறிவியல், கணித ஆராய்ச்சி மையம் உருவாக்க ரூ.100 கோடி ஒதுக்கப்படும்.

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு ரூ.572 கோடி ஒதுக்கீடு செய்யப் படும்.

    ஆன்லைன் டெலிவரியில் ஈடுபடும் தற்சார்பு தொழிலாளர்கள் இருசக்கர வாகனம் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

    அரசு அலுவலர்களின் ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்பட்டு 15 நாட்களாக நிர்ணயம் செய்யப்படும். அதிகபட்சம் 15 நாட்கள் வரை ஈட்டிய விடுப்பை சரண் செய்து பண பலன் பெறலாம்.

    Live Updates

    • 14 March 2025 11:47 AM IST

      தாயுமானவர் திட்டத்தின் கீழ் பெற்றோரை இழந்து உறவினர் பாதுகாப்பில் வளரும் 50,000 குழந்தைகள் 18 வயது வரையில் இடைநிற்றல் இன்றி பள்ளிப்படிப்பை தொடர்வதற்கு ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும்.

    • 14 March 2025 11:32 AM IST

      அறநிலையத் துறை அறிவிப்புகள்:

      சுமார் ரூ. 7000 கோடி மதிப்பிலான இந்து சமய அறநிலையத்துறை சொத்துகள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் 2662 திருக்கோவில்களில் பணிகள் நிறைவு பெற்று குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளன. 777 கோவில்களில் நடைபெறும் அன்னதானம் திட்டத்தின் மூலம் தினமும் சராசரியாக ஒரு லட்சம் பேர் பயன் அடைகின்றனர்.

    • 14 March 2025 11:28 AM IST

      பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் பணிகள் விரைவுப்படுத்தப்படும்

    • 14 March 2025 11:26 AM IST

      தமிழ்நாட்டில் மிக அதிவேக ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும். சென்னை - விழுப்புரம், சென்னை - வேலூர் இடையே மிக அதிவேக ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. மண்டல விரைவு போக்குவரத்து திட்டத்தின் கீழ் மணிக்கு 160 கிலோமீட்டர்கள் வேகத்தில் ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    • 14 March 2025 11:24 AM IST

      கலைஞர் கைவினை திட்டத்தில் 19,000 கைவினைஞர்களுக்கு மானிய நிதியாக ரூ. 74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    • 14 March 2025 11:20 AM IST

      தனுஷ்கோடியில் புதிய பறவைகள் சரணாலயம் அமைக்கப்படும்

    • 14 March 2025 11:18 AM IST

      போக்குவரத்து துறையை மேம்படுத்த ரூ. 12964 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தாம்பரம் - வேளச்சேரி இடையே மெட்ரோ ரெயில் இயக்க விரிவான திட்டம் தயாரிக்கப்படும். பூந்தமல்லி - போரூர் இடையே வருகிற டிசம்பர் மாதம் மெட்ரோ ரெயில் இயக்கப்படும்.

    • 14 March 2025 11:16 AM IST

      மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ. 21906 கோடி நிதி ஒதுக்கப்படும்

    • 14 March 2025 11:15 AM IST

      இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறைக்கு ரூ. 578 கோடி நிதி ஒதுக்கப்படும்

    • 14 March 2025 11:13 AM IST

      தமிழ்நாடு முழுக்க 1125 மின்சார பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும். சென்னை, மதுரை, கோவையில் மின்சார பேருந்துகள் இக்கப்படும்.

    Next Story
    ×