search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பெற்றோரை இழந்த 50,000 குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2000 உதவித்தொகை- பட்ஜெட்டில் அறிவிப்பு
    X

    பெற்றோரை இழந்த 50,000 குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2000 உதவித்தொகை- பட்ஜெட்டில் அறிவிப்பு

    • பல்வேறு அரசுத்துறைகளில் காலியாக உள்ள 40,000 பணியிடங்கள் வரும் நிதியாண்டில் நிரப்பப்படும்.
    • சேலம், கடலூர், நெல்லையில் ‘கலைஞர் நூலகம்’ அமைக்கப்படும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று தாக்கலான பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகளில் சில:-

    * தாயுமானவர் திட்டத்தின் கீழ் பெற்றோரை இழந்து உறவினர்களின் பாதுகாப்பில் வளரும் 50,000 குழந்தைகள் 18 வயது வரையில் இடைநிற்றல் இன்றி பள்ளிப்படிப்பை தொடர மாதம் ரூ.2000 உதவித் தொகை வழங்கப்படும்.

    * கடந்த 4 ஆண்டுகளில் 57,000 அரசுப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    * பல்வேறு அரசுத்துறைகளில் காலியாக உள்ள 40,000 பணியிடங்கள் வரும் நிதியாண்டில் நிரப்பப்படும்.

    * சேலம், கடலூர், நெல்லையில் 'கலைஞர் நூலகம்' அமைக்கப்படும். போட்டித் தேர்வு மாணவர்கள் பயன்பெறும் வகையில் தலா 1 லட்சம் புத்தகங்கள் மற்றும் மாநாட்டுக்கூடம் வசதிகளடன கட்டப்பப்படும்.

    * தமிழ்நாட்டில் மேலும் பல செஸ் சாம்பியன்களை உருவாக்கும் வகையில் பள்ளிப் பாடத்திட்டத்தில் சதுரங்க விளையாட்டை சேர்த்திட, உடற்கல்விப் பாடத்திட்டத்தில் உரிய மாற்றங்கள் செய்யப்படும்.

    Next Story
    ×