என் மலர்
தமிழ்நாடு

தமிழக தேர்வர்களுக்கு தெலுங்கானாவில் தேர்வு மையம் ஏன்? - ரெயில்வே விளக்கம்

- ரெயில்வே துறைக்கு அதிமுக, பாமக, காங்கிரஸ் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
- ரெயில்வே அமைச்சருக்கு மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கடிதம் எழுதினார்.
தெற்கு ரெயில்வே உதவி லோகோ பைலட் 493 பணியிடங்களுக்கு 2ஆம் கட்டத்தேர்வு மார்ச் 19ல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்வு அருகாமை மையங்களில் நடந்த நிலையில், 2ஆம் கட்ட தேர்வுக்கு தெலங்கானாவில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாட்டு தேர்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ரெயில்வே துறைக்கு அதிமுக, பாமக, காங்கிரஸ் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இதனிடைய தொடர்பாக ரெயில்வே அமைச்சருக்கு மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கடிதம் எழுதினார்.
இந்நிலையில், தமிழக தேர்வர்களுக்கு தெலுங்கானாவில் தேர்வு மையம் ஒதுக்கியது தொடர்பாக ரெயில்வே தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
அதில், ரெயில்வேயில் உதவி லோகோ பைலட் பணிக்கான இரண்டாம் கட்டத் தேர்வு அனைவருக்கும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவதால் விண்ணப்பதாரர்களுக்கு முடிந்த அளவு சொந்த மாநிலத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. சொந்த மாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்க முடியாத சூழலில் அண்டை மாநிலங்களில் மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் எந்த பாகுபாடும் காட்டப்படவில்லை; இது ஏற்கனவே பின்பற்றப்படும் நடைமுறைதான். இட ஒதுக்கீட்டுப் பிரிவு தேர்வர்கள், ரெயிலில் இலவசமாக பயணிக்க பாஸ் தரப்படும்