search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மக்காசோளம் மீதான வரியை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்- ஜி.கே.வாசன்
    X

    மக்காசோளம் மீதான வரியை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்- ஜி.கே.வாசன்

    • வேளாண் விற்பனை குழுக்கள் மூலமாக 40-க்கும் மேற்பட்ட விவசாய உற்பத்திப்பொருட்களுக்கு 1 சதவீதம் செஸ் வரி ஏற்கனவே வசூலிக்கப்படுகிறது.
    • மக்காச்சோளத்திற்கு 1 சதவீதம் செஸ் வரியை விதித்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வேளாண் விற்பனை குழுக்கள் மூலமாக 40-க்கும் மேற்பட்ட விவசாய உற்பத்திப்பொருட்களுக்கு 1 சதவீதம் செஸ் வரி ஏற்கனவே வசூலிக்கப்படுகிறது. மக்காச்சோளத்திற்கு ஏற்கனவே திருப்பூர், ஈரோடு, கோவை, நாகை மாவட்டங்களில் 1 சதவீதம் செஸ் வரி வசூலிக்கும் நடைமுறை உள்ளது.

    தற்போது நாமக்கல், சேலம், விழுப்புரம், அரியலூர், திருவள்ளூர், விருதுநகர், கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், மதுரை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தேனி, திருச்சி, திருவண்ணாமலை, வேலூர், செங்கல்பட்டு ஆகிய 18 மாவட்டங்களிலும் உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படும் மக்காச்சோளத்திற்கு 1 சதவீதம் செஸ் வரியை விதித்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும்.

    தமிழக அரசு ஒரு குவிண்டால் மக்காச்சோளம் ரூ. 3,500 க்கு விற்றால் மட்டுமே விவசாயிகள் பயன் பெறக்கூடிய நிலையில், தற்போது ரூ. 2,800 க்கு விற்று வந்த மக்காச்சோளம், இப்போதைய செஸ் வரி விதிப்பால் ரூ. 2,300 க்கு விற்கப்படுகிறது. இதனால் ஒரு குவிண்டாலுக்கு ரூ. 500 நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.

    எனவே வேளாண் விற்பனை வணிகத்துறையின் பட்டியலிடப்பட்டுள்ள 40 பொருட்களுக்கும், விவசாய நிலங்களில் விவசாயிகள், வியாபாரிகள் இடையே நேரடியாக நடைபெறும் விற்பனைக்கு முழுமையாக வரி விலக்களிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×