search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஊத்தங்கரை அருகே வினோதம்: சிவலிங்கத்தை தரிசனம் செய்யும் சேவல்
    X

    ஊத்தங்கரை அருகே வினோதம்: சிவலிங்கத்தை தரிசனம் செய்யும் சேவல்

    • ஒரு சேவல் தானாக வந்து, சிவலிங்கத்தை 45 நிமிடங்கள் அசையாமல் பார்த்துக்கொண்டு நிற்கிறது.
    • நிகழ்வு ஆன்மீக ரீதியாக மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது.

    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள ராமகிருஷ்ணபதி ஊராட்சியில் ஒரு புதிய சிவன் கோவில் கட்டுமானம் நடந்து வருகிறது. இந்த கோவில் கட்டுமானத்தின் போது, அங்கு இருந்த பழைய கற்கால சிவலிங்கம் அருகிலுள்ள ஒரு கூரை கொட்டாயில் தற்காலிகமாக வைக்கப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. இந்த இடத்தில் ஒரு விந்தையான நிகழ்வு நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    தினந்தோறும் மதியம் 12 மணிக்கு, ஒரு சேவல் தானாக வந்து, சிவலிங்கத்தை 45 நிமிடங்கள் அசையாமல் பார்த்துக்கொண்டு நிற்கிறது. இந்த நிகழ்வு கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடந்து வருகிறது. சேவலின் இந்த தெய்வீக தரிசனம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், இன்பத்தையும், ஆன்மீக உணர்வுகளையும் ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிகழ்வு, கோவில் கட்டுமானம் முடிந்து கருவறை உருவாகும் வரை தொடரும் என்று மக்கள் நம்புகின்றனர். குறிப்பாக, கருவறை வெளியில் இருக்கும் இந்த கற்கால சிவலிங்கத்தை நோக்கி ஒரு பறவை இனமான சேவல் தினசரி வந்து தரிசனம் செய்வது, அதன் உண்மையான ஆன்மீக சக்தியை வெளிப்படுத்துவதாக கருதப்படுகிறது.

    இந்த விந்தையான நிகழ்வு ராமகிருஷ்ணபதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் இதை ஒரு தெய்வீக அடையாளமாகக் கருதி, கோவில் கட்டுமானம் விரைவாக முடிக்கப்பட வேண்டும் என விரும்புகின்றனர். இந்த நிகழ்வு ஆன்மீக ரீதியாக மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது.

    Next Story
    ×