என் மலர்
தமிழ்நாடு

கையில் பாம்புடன் டி.டி.எப் வாசன் வெளியிட்ட வீடியோ- செல்லப் பிராணிகள் கடையில் வனத்துறை சோதனை

- டி.டி.எஃப். வாசன் தனது கையில் பாம்பு ஒன்றுடன் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
- திருவொற்றியூரில் உள்ள செல்லப் பிராணிகள் கடையில், வனத்துறையினர் சோதனை செய்தனர்.
வீடியோ வெளியிட்டு அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருபவர் டி.டி.எஃப். வாசன். பைக் ரைடிங் வீடியோக்களை பதிவேற்றம் செய்து பிரபலமான இவர் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். சமயங்களில் சிறைவாசம் வரை சென்று வந்துள்ள டி.டி.எஃப். வாசன் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
புதிய வீடியோவில் காரில் பயணம் செய்த டி.டி.எஃப். வாசன் தனது கையில் பாம்பு ஒன்றுடன் விளையாடுகிறார். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட வீடியோ குறித்து வனத்துறை விசாரணை செய்வதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், தான் வெளியிட்ட வீடியோவில் இடம்பெற்றிருந்த பாம்பு வளர்க்க முறையாக உரிமம் பெற்று இருப்பதாகவும் திருவொற்றியூரில் உள்ள செல்லப் பிராணிகள் கடையில் பாம்புக்கு கூண்டு வாங்கியதாகவும், பாம்பு விற்கப்படுவதாகவும் டி.டி.எப். வாசன் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, திருவொற்றியூரில் உள்ள செல்லப் பிராணிகள் கடையில், வனத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது கடையில் இருந்த அரியவகை கிளி மற்றும் ஆமையை வனத்துறையினர் கைப்பற்றினர்