search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விஜய்க்கு பாதுகாப்பு ஏன்?: ஜாமீன் வாங்கியிருக்கும் அமைச்சர்களை நீக்க வேண்டும்- செல்லூர் ராஜூ
    X

    விஜய்க்கு பாதுகாப்பு ஏன்?: ஜாமீன் வாங்கியிருக்கும் அமைச்சர்களை நீக்க வேண்டும்- செல்லூர் ராஜூ

    • தி.மு.க. முழுவதும் ஜாமீன் வாங்கிய அமைச்சர்கள் இருக்கிறார்கள்.
    • தி.மு.க. ஆட்சியில் பெண்கள் முதல் மூதாட்டி வரை பாதுகாப்பு இல்லை.

    மதுரை:

    மதுரை மாவட்டம் பரவையில் பக்தர்களுக்கு நிழற்குடை அமைக்க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பூமி பூஜை நடத்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எங்களை பொறுத்தவரை எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே பொதுச் செயலாளர். 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை அவர் மேற்கொள்வார். அவர் வழியில் நாங்கள் பணியாற்றுவோம்.

    இன்றும் நான் என் மனைவியை காதலிக்கிறேன், என் குழந்தைகள் மீது அன்பு செலுத்துகிறேன். என்னை போல் அனைவரும் அவர்களது மனைவியை காதலியுங்கள் என கூறி அனைவருக்கும் அன்பு தின காதலர் தின வாழ்த்துக்கள்.

    வழக்கில் இருக்கும் அமைச்சருக்கு கூடுதல் பொறுப்பா? ஜாமீன் மனுவில் வந்தவருக்கு கூடுதல் பொறுப்பு கொடுத்து என்ன பயன்? செந்தில் பாலாஜியிடம் சுப்ரீம் கோர்ட் கேள்விக்கு மேல் கேள்வி கேட்கின்றது.

    தி.மு.க. முழுவதும் ஜாமீன் வாங்கிய அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் தூக்கிவிட்டு இளைஞர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும்.

    ஜாமீன் வாங்கி இருக்கும் அமைச்சர்கள் அனைவரையும் நீக்கிவிட்டு கட்சி பணியை பார்க்க சொல்ல வேண்டும். எம்.ஜி.ஆரை, கலைஞர் பேசாத முதலமைச்சர் என்று கூறினார். ஆனால் ஒரே இரவில் 10 அமைச்சர்களை மாற்றியவர் எம்.ஜி.ஆர்.

    அ.தி.மு.க.வில் பிளவுகள் இல்லை. விஜய் ஒரு பிரபலமான நடிகர். மக்கள் செல்வாக்கு அதிகமாக இருக்கிறது. இளைஞர்கள் பட்டாளம் அதிகமாக இருக்கிறார்கள். அதனால் அவருக்கு பாதுகாப்பு வழங்கி இருக்கிறார்கள்.

    அ.தி.மு.க. ஆட்சி என்றால் பாதுகாப்பாக இருக்கலாம். தி.மு.க. ஆட்சியில் பெண்கள் முதல் மூதாட்டி வரை பாதுகாப்பு இல்லை என்பதால் நடிகர் விஜய்க்கு பாதுகாப்பு கொடுப்பது நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×