என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உலகம்
![பஸ் ஆற்றில் விழுந்து 2 இந்தியர்கள் உள்பட 12 பேர் பலி: நேபாளத்தில் சோகம் பஸ் ஆற்றில் விழுந்து 2 இந்தியர்கள் உள்பட 12 பேர் பலி: நேபாளத்தில் சோகம்](https://media.maalaimalar.com/h-upload/2024/01/13/2001738-accid.webp)
X
பஸ் ஆற்றில் விழுந்து 2 இந்தியர்கள் உள்பட 12 பேர் பலி: நேபாளத்தில் சோகம்
By
Maalaimalar13 Jan 2024 1:24 PM IST
![Maalaimalar Maalaimalar](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- நேபாளத்தில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பாலத்தில் இருந்து அருகிலுள்ள ஆற்றில் கவிழ்ந்து விழுந்தது.
- இந்த விபத்தில் 2 இந்தியர்கள் உள்பட 12 பேர் பரிதாபமாக இறந்தனர். 22 பேர் காயம் அடைந்தனர்.
காத்மாண்டு:
நேபாள நாட்டின் டாங் மாவட்டம் நேபால் கஞ்சில் இருந்து காத்மாண்டுக்கு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த பஸ் பாலத்தில் இருந்து அருகிலுள்ள ஆற்றுக்குள் தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 2 இந்தியர்கள் உள்பட 12 பேர் பரிதாபமாக இறந்தனர். 22 பேர் படுகாயம் அடைந்தனர். பலியானவர்களில் 8 பேர் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் இந்தியர்களான பீகாரை சேர்ந்த யோகேந்திரராம் (67), உத்தர பிரதேசத்தை சேர்ந்த முனே ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது.
பஸ் ஆற்றில் விழுந்த விபத்தில் 12 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
X