என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உலகம்
![பிரேசிலில் சோகம்: சிறிய ரக விமானம் தரையில் மோதி 2 பேர் பலி பிரேசிலில் சோகம்: சிறிய ரக விமானம் தரையில் மோதி 2 பேர் பலி](https://media.maalaimalar.com/h-upload/2025/02/07/9059734-plane.webp)
X
பிரேசிலில் சோகம்: சிறிய ரக விமானம் தரையில் மோதி 2 பேர் பலி
By
மாலை மலர்8 Feb 2025 3:17 AM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்தில் சிக்கியது.
- இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பிரேசிலா:
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று பிரேசில். இந்நாட்டின் சாவ் பாலோ என்ற நகரில் இருந்து நேற்று சிறிய ரக விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் விமானி, விமான உரிமையாளர் என 2 பேர் பயணம் செய்தனர்.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து, திடீரென பிசியான சாலையில் மோதியது.
இந்த விபத்தில் குறைந்தது 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த அதிகாரிகள் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விமான விபத்து தொடர்பான காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
Next Story
×
X