என் மலர்
உலகம்

காசாவுக்கு பேரழிவை வரவழைத்த ஹமாஸ்... இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி 500 நாள் நிறைவு

- 2023 அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் தெற்குப் பகுதிக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.
- 1200 பேர் கொன்று குவித்ததுடன், 251 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி திடீரென இஸ்ரேல் நாட்டின் தெற்குப் பகுதிக்குள் நுழைந்து கொடூரமாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். அதோடு 251 பேர் பயணக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், காசா முனை மீது கொடூர தாக்குதல் நடத்தியது. பிணைக்கைதிகளை விடுவிப்பதற்காக 2023 நவம்பர் மாதம் போர் இடைநிறுத்தம் ஏற்பட்டது. அப்போது 100-க்கும் முற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். பின்னர் ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பினர் முறியதாக குற்றம்சாட்டிய இஸ்ரேல், காசா மீது மீண்டும் தாக்குதல் நடத்தியது.
அதன்பின் தற்போது கடந்த மாதம் 19-ந்தேதி 2-வது கட்டமாக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் மார்ச் முதல் வாரத்தோடு முடிவடைகிறது. அதன்பின் நீடிக்குமா? அல்லது மீண்டும் போர் தொடங்குமா? என்பது தெரியவில்லை.
இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி 500 நாட்கள் ஆகிறது. ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு காசா சந்தித்த இழப்புகள் ஏராளம். காசா முனையில் 48 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேல் எலைக்குள் ஹமாஸ் புகுந்து தாக்குதல் நடத்தியது முதல் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது வரையிலான இந்த 500 போரின் சுருக்கம் பின்வருமாறு:-
* 2023 அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலால் இஸ்ரேலில் 1200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
* காசாவில் இருந்து 251 பேரை பணயக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்றனர்.
* காசாவில் இன்னும் 73 பேர் பணயக் கைதிகளாக உள்ளனர். இதில் அக்டோபர் 7-ந்தேதிக்கு முன்னதாக பிடித்துச் செல்லப்பட்ட 3 பேரும் அடங்குவர்.
* இவர்களில் 36 பேர் உயிரிழந்திருக்கலாம் என இஸ்ரேலால் நம்பப்படுகிறது. அதில் ஒருவர் அக்டோபர் 7-ந்தேதிக்கு முன்னதாக பிடித்துச் செல்லப்பட்டனர்.
* காகாவில் 48,200-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் ஹமாஸ் அமைப்பினர் எத்தனை போர்? பொதுமக்கள் எத்தனை பேர் என காசா சுகாதார அமைச்சகம் வேறுபடுத்தி காட்டவில்லை. இதில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
* பாலஸ்தீனத்தில் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 600-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
* அக்டோபர் 7-ந்தேதியில் இருந்து 846 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
* அக்டோபர் 7-ந்தேதியில் இருந்து இஸ்ரேல் காசா மீது 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவியுள்ளது.
* பாலஸ்தீனத்தின் 90 சதவீத மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
* வடக்கு காசாவில் இருந்து 5 லட்சத்து 86 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளனர்.
* காசா மற்றும் லெபனானில் (ஹிஸ்புல்லா) இருந்து நடத்தப்பட்ட தாக்குதலால் இஸ்ரேலில் 75 ஆயிரத்து 500 பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.
* காசாவில் 2 லட்சத்து, 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்படைந்துள்ளன அல்லது தரைமட்டமாகியுள்ளன.
* 92 சதவீத முக்கியமான சாலைகள் சேதம் அடைந்துள்ளன அல்லது முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன.
* 84 சதவீத சுகாதாரம் தொடர்பான இடங்கள் சேதம் அடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன.