search icon
என் மலர்tooltip icon

    உகாண்டா

    • உகாண்டாவில் 26 வயதான மகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு.
    • சுமார் ஒரு மாதம் ஆகியும் மகளை வெளியில் கொண்டு வர முடியவில்லை என தொழில் அதிபர் கவலை.

    இந்திய வம்சாவளி தொழில் அதிபரான பங்கஜ் ஓஸ்வால் பல்வேறு நாடுகளில் முதலீடு செய்து தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். ஆப்பிரிக்கா நாடானா உகாண்டாவிலும் தொழில் நடத்தி வருகிறார். அங்குள்ள தொழிற்சாலை நிர்வாகத்தை பார்வையிட தனது மகள் வசுந்தாரா ஓஸ்வாலை அனுப்பி வைத்துள்ளார்.

    உகாண்டா போலீஸ் அதிகாரம் மிக்க நாடாக விளங்கி வருகிறது. அவர்கள் எந்தவித நீதிமன்ற ஆணை இல்லாமல் யாரை வேண்டுமென்றாலும் பிடித்து சிறையில் அடைக்கும் அதிகாரம் பெற்றவர்களாக விளங்கி வருகிறார்கள்.

    இந்த நிலையில்தான் நபர் ஒருவர் காணாமல் போனது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டு எனக் கூறி வசுந்தாரா ஓஸ்வாலை போலீஸ் அதிகாரிகள் கடந்த 1-ந்தேதி கைது செய்துள்ளனர்.

    வசுந்தாரா கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டவர் தான்சானியாவில் உயிருடன் இருக்கிறார். வசுந்தாரா மீது பொய் குற்றம்சாட்டப்பட்டுள்ளது என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே இப்படி கடுமையான ஒரு நாட்டிற்கு தனது மகளை அனுப்பி வைத்ததற்காக, பங்கஜ் ஓஸ்வால் மிகவும் வருந்துவதாகவும், மிகவும் குற்ற உணர்ச்சியாக உணர்ந்து தன்னைத்தானே ஒரு ரகசிய இடத்தில் சிறை வைத்துள்ளதாகவும் அவரது மகள் தெரிவித்துள்ளார்.

    ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு வசுந்தராவின் இளைய சகோதரி ரித்தி ஓஸ்வால் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ரித்தி ஓஸ்வால் கூறியதாவது:-

    வசுந்தாரா ஓஸ்வால் குடும்ப தொழிற்சாலை வளர்ச்சிக்காக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக உகாண்டா சென்றார். கடந்த 1-ந்தேதி தொழிற்சாலைக்கு சென்றபோது, கேள்வி கேட்க வேண்டும் என சாக்குப்போக்கு சொல்லி ஆயுதம் ஏந்தியவர்கள் அவரை அழைத்து சென்றுள்ளனர்.

    அதில் இருந்து மூன்று வாரங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மனிதாபிமானமற்ற நிலையில் உள்ளார். அவர்கள் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளனர். 26 வயதான வசுந்தாரா ஓஸ்வால் வாரன்ட் இல்லாமல் கைது செய்யப்பட்டுள்ளார்.

    வசுந்தாராவை உகாண்டாவிற்கு அனுப்பியது பற்றி பெற்றோர்கள் குற்றமாக உணர்கிறார்கள். அவர்கள் உகண்டாவிற்கு செல்ல முடியாத உதவியற்ற நிலை குற்ற உணர்வை மேலும் அதிகரித்துள்ளது.

    அங்குள்ள அதிகாரிகளால் என்னுடைய பெற்றோர்கள் கைது செய்யப்படும் வாய்ப்பு உள்ளதால் அவர்கள் உகாண்டா செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் கைது செய்யப்பட்டால் என்னுடைய சகோதரிக்காக அவர்கள் போராட முடியாத நிலை ஏற்படும்.

    இதனால் எனது பெற்றோர் வெளி உலக தொடர்பை துண்டித்துவிட்டு, சகோதரிக்கு உதவ முடியும் என்ற நபர்களிடம் மட்டுமே பேசி வருகிறார்கள். உகாண்டாவில் எனது சகோதரி கைது செய்யப்பட்டார் என்ற செய்தியை கேட்கும்போது பெற்றோர் லண்டனில் இருந்தனர். அப்போது இருந்து ரகசிய இடத்தில் தங்களை தாங்களாகவே சிறைப்பிடித்துள்ளனர். வசுந்தராவின் வழக்குக்காக தங்கள் நேரத்தையும் சக்தியையும் செலவழித்து வருகின்றனர்.

    அவர்கள் ஒரு நாளைக்கு ஒரு நேர உணவிற்கு மேல் சாப்பிடுவதில்லை, மேலும் தங்கள் மகளை விடுவிக்க முடியும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து வருகின்றனர்.

    தொழிற்சாலையை நிர்வகிப்பதற்காக உகாண்டா செல்ல அவரை வற்புறுத்தியதற்காக தங்களை மிகவும் குற்றம் செய்தவர்களாக உணர்கிறார்கள். அவர்கள் ஆண் பெண் சமம் என எங்களுக்கு கற்பித்து க்ரீன் பீல்டு திட்டங்களில் பணிபுரிய என்னுடைய சகோதரியை ஊக்குவித்தார்கள்.

    அவள் ஒரு பெண் என்பதாலேயே எளிதான ஒன்றைக் கொடுப்பதற்குப் பதிலாக, மிகவும் சவாலான பணிகள் ஒதுக்கினார்கள். அவளுடைய தற்போதைய சூழ்நிலைக்கு தாங்கள்தான் பொறுப்பு என உணர்கிறார்கள்.

    இவ்வாறு ரித்தி ஓஸ்வால் தெரிவித்துள்ளார்.

    • 75 சதவீத தீக்காயங்களுடன் கென்யாவில் உள்ள மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார் ரெபேக்கா.
    • பாரீஸ் ஒலிம்பிக்சில் கலந்துகொண்டு மாரத்தான் பிரிவில் 44வது இடத்தைப் பிடித்த ரெபேக்கா சமீபத்தில் நாடு திரும்பியிருந்தார்

    உகாண்டா நாட்டை சேர்ந்த ஒலிம்பிக்ஸ் மாரத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை ரெபேக்கா செப்டேகி [Rebecca Cheptegei] மீது அவரது காதலன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 75 சதவீத தீக்காயங்களுடன் கென்யாவில் உள்ள மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார் ரெபேக்கா.

     

     

    கடைசியாக உகாண்டா சார்பில் பாரீஸ் ஒலிம்பிக்சில் கலந்துகொண்டு மாரத்தான் பிரிவில் 44வது இடத்தைப் பிடித்த ரெபேக்கா சமீபத்தில் நாடு திரும்பியிருந்தார். இதன்பின் கென்யா நாட்டில் மேற்கு Trans Nzoia மாகாணத்தில் அவருக்கு சொந்தமான வீட்டில் ஓய்வில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் வைத்து ரெபேக்காவுக்கும் அவரது காதலன் டேனியலுக்கும் [Daniel Ndiema] இடையில் வாக்குவாதம் எழுந்ததாக தெரிகிறது.

    வாக்குவாதம் முற்றிய நிலையில் ரெபேக்கா மீது பெட்ரோல் ஊற்றி தீவை வைத்துள்ளார் டேனியல். இதனால் அவருக்கு 75 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டேனியலுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாக உகாண்டா மற்றும் கென்ய நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

    • பல தசாப்தங்களாக வேரூன்றிய மரங்களை கூட அப்புறப்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது
    • மரத்தை தேர்ந்தெடுப்பது திருமண உடையை தேர்வு செய்வதை போல் இருந்ததாக பேட்ரீசியா கூறினார்

    மனிதர்களின் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரிப்பதால், அவர்கள் இயற்கை வளங்களை சுரண்டுதலும் அதிகரிப்பதாக குற்றம் சாட்டி, நீண்ட காலமாக, சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் வனங்கள், மண், மரம், கனிமம், மலை, நதிநீர், காற்று மண்டலம் உள்ளிட்டவைகளை பாதுகாக்க உலகம் முழுவதும் போராடி வருகிறார்கள்.

    தனிநபர் பயன்பாடு மட்டுமின்றி, சாலைகளை அகலப்படுத்துதல் மற்றும் பொது பயன்பாட்டிற்காக கட்டிடங்களை நிர்மாணித்தல் போன்ற காரணங்களுக்காக நீண்ட காலமாக வேரூன்றிய மரங்கள் கூட அப்புறப்படுத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில், கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள உகாண்டா நாட்டில், தலைநகர் கம்பாலா நகரில், 29 வயதான, ஃபெயித் பேட்ரீசியா அரியோகோட் (Faith Patricia Ariokot), எனும் சுற்றுச் சூழல் ஆர்வலர், மரங்களை வெட்டுவதை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய சாதனை புரிந்துள்ளார்.

    வனங்களை அழிப்பதை நிறுத்தவும், புதிதாக பல மரங்களை நடுவதை ஊக்குவிக்கவும், உலகெங்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒரு பெரிய மரத்தின் தண்டு பகுதியை பேட்ரீசியா 16 மணி நேரம் 6 நொடிகள் தொடர்ந்து கட்டியணைத்தபடி நின்று கின்னஸ் உலக சாதனை புரிந்தார்.


    தனது சாதனை குறித்து கூறும் போது பேட்ரீசியா தெரிவித்ததாவது:

    இந்த சாதனைக்காக ஒரு மரத்தை தேர்ந்தெடுப்பது திருமண உடையை தேர்ந்தெடுப்பதை போன்ற அனுபவமாக இருந்தது.

    நான் கட்டியணைத்தபடி நின்ற மரத்தை நான் தேர்ந்தெடுக்கவில்லை; அதுதான் என்னை தேர்ந்தெடுத்ததாக உணர்கிறேன்.

    அந்த மரத்தை பார்த்தவுடனேயே எனக்கு பிடித்து விட்டது.

    மரங்களை காக்க வேண்டியது மனிதர்களின் கடமை. மரங்கள்தான் பருவநிலை மாற்றங்களை தடுத்து சீரான தட்பவெட்பம் உலகெங்கும் உள்ள மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்கின்றன.

    இந்த முயற்சியில் எனது கால்கள் வலியாலேயே என்னை கொல்வது போல் இருந்தது.

    மரத்தின் கரடுமுரடான பகுதிகளில் கைகளை அழுத்தி கொண்டிருந்ததால் கைகளும் மிகவும் வலியை தந்தன.

    இருந்தும் நான் மன உறுதியுடன் கட்டியணைத்தபடி இருந்தேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த சாதனை முயற்சியின் போது பேட்ரீசியா, மரத்திலிருந்து தனது கரங்களை எந்த நிலையிலும் எடுக்க அனுமதிக்கப்படவில்லை என்பதும் சாதனை முயற்சிக்கான நேரம் முழுவதும் நின்றபடியே இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    பேட்ரீசியா முன்னர் இரு முறை இதே சாதனைக்கு முயற்சி செய்தார்.

    முதல் முறை அவரது முயற்சியை கேமிராவால் முழுவதுமாக பதிவு செய்ய முடியாமல் போனது.

    இரண்டாம் முறை புயல், மழை காரணமாக அவர் பின்வாங்கும் கட்டாயம் ஏற்பட்டது.

    • அக்டோபர் 7-ஆம் தேதி தொடங்கிய காசா - இஸ்ரேல் போர் தற்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
    • போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கும் வகையில், நிலையான தீர்வு தேவைப்படுகிறது.

    இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உகாண்டா தலைநகர் கம்பாலாவில் நடைபெற்ற 19வது அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார்.

    அப்போது அவர் கூறியதாவது, "அக்டோபர் 7-ஆம் தேதி தொடங்கிய காசா - இஸ்ரேல் போர் தற்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. காசாவில் தற்போது நிலவிவரும், மோதல்களைப் பற்றி நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த போரால் மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கும் வகையில், நிலையான தீர்வு தேவைப்படுகிறது. பயங்கரவாதத்தையும், பணயக்கைதிகளை பிடித்து வைத்திருப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார்.

    மேலும், அனைத்து நாடுகளும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மதிக்க வேண்டும். பாலஸ்தீன மக்கள் பாதுகாப்பான எல்லைக்குள் வாழவேண்டும். அதே வேளையில், இரு நாடுகளிலும் அமைதி நிலவுவதற்கான தீர்வை நாம் தேட வேண்டும். நமது கூட்டு முயற்சியின் மூலம் சுமூகமான தீர்வு எட்ட வேண்டும்" எனக் கூறினார்.

    • ராணி எலிசபெத் உயிரியல் பூங்கா ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிலர் விலங்குகளை காண சென்று கொண்டிருந்தனர்.
    • வெளிநாடு பயணிகள் 2 பேர் உடலில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    கம்பாலா:

    ஆப்பிரிக்கா நாடான உகாண்டாவின் மேற்கு மாகாணத்தில் ராணி எலிசபெத் உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்கும் இந்த பூங்காவில் அதிக அளவிலான வனவிலங்குகளுக்கு புகலிடமாக விளங்கி வருகிறது. இதனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் இந்த பூங்காவுக்கு வருகை தருவார்கள்.

    இந்தநிலையில் ராணி எலிசபெத் உயிரியல் பூங்கா ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிலர் விலங்குகளை காண சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கே பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் சிலர் அந்த சபாரி வாகனத்தை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். பின்னர் அந்த வாகனத்தை தீவைத்து கொளுத்திவிட்டு தப்பியோடினர். இந்த தாக்குதலில் வெளிநாடு பயணிகள் 2 பேர் உடலில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் அவர்களுடன் சென்ற உள்ளூர் வழிகாட்டி ஒருவரும் கொல்லப்பட்டார்.

    இதுகுறித்து அந்த நாட்டின் அதிபர் யோவேரி முசவேனி கண்டனம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ப்வேரா மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
    • உகாண்டா காவல்துறையும் உகாண்டா மக்கள் பாதுகாப்புப் படையும் சந்தேக நபர்களை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    மேற்கு உகாண்டா, காங்கோ ஜனநாயகக் குடியரசின் எல்லையில் உள்ள போண்ட்வே பகுதியில் லுபிரிரா மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்குள் நுழைந்த கூட்டணி ஜனநாயகப் படையைச் சேர்ந்த ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர்.

    இதில், 38 மாணவர்கள் உள்பட 41 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 8 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் அங்குள்ள ப்வேரா மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    சம்பவம் குறித்து உகாண்டா போலீஸ் படையின் செய்தித் தொடர்பாளர் ஃப்ரெட் எனங்கா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், " பள்ளிக்கூடத்தில் ஒரு தங்குமிடம் எரிக்கப்பட்டது மற்றும் ஒரு உணவுக்கூடம் சூறையாடப்பட்டது. இங்கு இதுவரை 41 உடல்கள் பள்ளியில் இருந்து மீட்கப்பட்டு ப்வேரா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளன.

    உகாண்டா காவல்துறையும் உகாண்டா மக்கள் பாதுகாப்புப் படையும் சந்தேக நபர்களை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்" என்றார்.

    ×